இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, “சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன்.
ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். ‘கருப்பு’ படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார்.
நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த வசனத்தை எல்லோரும் என்ஜாய் பண்றாங்க. ஆனால், ‘முக்குத்தி அம்மன்’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆச்சு.
இந்த இடத்துல லாஜிக்கலாக மக்கள் யோசிக்க மாட்டாங்கனு நம்பினேன். ஏன்னா, சினிமா ஒரு மேஜிக். அதுபோல, சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் ‘இதை கண்டிப்பா பேசணுமா’னு கேட்பார். பிறகு நான்தான் அவரைப் பேச வைப்பேன். அதுக்கு நானே பொறுப்பெடுத்துக்கிறேன்” எனப் பேசினார்.






















