தணிக்கை நல்லது!
யோஷிடோ உசுயின் மங்கா தொடரான ஷின் சான் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்ற எல்லையை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு.
இதுகுறித்துப் பேசிய இயக்குநர்,
“எனக்கு இந்தியாவில் இருக்கும் சென்சார்ஷிப் குறித்துத் தெரியாது, ஆனால் ஷின் சான் கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது.
ஜப்பானில் தணிக்கை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு எது சரியாக வரும் என்ற விதிகள் உள்ளன. அது குழந்தைகளைப் பாதுகாப்பதனால் மோசமானதாகக் கருத அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.
“உதாரணமாக எனக்கு குழந்தைகள் உள்ளனர். நான் அவர்கள் பின்புறத்தை (ஷின் சான்) காட்ட வேண்டாம் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஷின் சான் குழந்தைகளின் ஹீரோ. அவன் என்ன செய்தாலும் அதை அப்படியே குழந்தைகள் காப்பி அடிக்கின்றனர். அதனால் இந்த மாற்றங்கள் நல்லதுதான் என நினைக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.






















