Election Leave With Salary: மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல்:
இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலானது, முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது தேர்தல் ஆணையம்.
விடுமுறை:
மேலும், அனைவரும் வாக்களிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விடுமுறை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விடுமுறை தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவித்ததாவது, வாக்களிக்கும் தினத்தன்று ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறையுடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தது.
Also Read:Model Code of Conduct: வேட்பாளர்களே ஜாக்கிரதை: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்; என்ன செய்யலாம், கூடாது?
யாரெல்லாம் தகுதியுடையவர்கள்:
அரசு பணியாளர்கள்
தனியார் துறையைச் சேர்ந்தவர்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
பிபிஓ
கடைகளில் பணியாற்றும் தினக்கூலிகள்
தற்காலிக பணியாளர்கள்
சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் விடுமுறையுடன் கூடிய ஊதியத்தை வழங்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெரிவிக்கிறது.
ஆகையால் ஏப்ரல் 19 தேதியன்று, இந்த உத்தரவை நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பின்பற்றும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களாட்சியின் முக்கிய கூறாக வாக்க அளிப்பது உள்ளது. பலர் மக்களாட்சி செயல்பாடுகளில் பங்கு பெறும்போது, மக்களாட்சி மேலும் வலுவடையும். ஆகையால், அனைவரும் தேர்தல் நாளன்று வாக்களித்து மக்களாட்சி பண்பை வலுப்படுத்துங்கள்.
Also Read:Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
wettanbieter ohne deutsche lizenz Also visit my blog; basketball over Under wetten
real money united statesn online parhaat casino bonukset 2022, best online bingo sites united kingdom and online pokies united states…
list of usa online casinos a to z, new online casino united states 2021 and 21dukes casino login, or online…
aposta em cavalos Here is my web-site: Plataforma De Apostas Crash
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா | ACTPnews.com
-
-

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்” – அமைச்சர் ரமேஷ்| Leak of HR&CE Department secrets: “They are spying out of fear of having committed wrongdoing” – Minister Ramesh. | ACTPnews.com
-

“கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?” – திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில் | Minister Arun Raj Responds to Corruption Charges Against Previous Government | ACTPnews.com
-




















kombiwette eine falsch my blog; Basketball Unentschieden Wetten