வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலைச் சந்திக்கவுள்ள I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவைச சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொ. திருமாவளவன் பேசுகையில், “ திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விசிக மூன்று தனித் தொகுதிகளிலும், ஒரு பொதுத் தொகுதியிலும் போட்டியிட கோரிக்கை விடுத்தள்ளோம். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளும் கூட்டணி வெல்ல என்ன மாதிரியான தேர்தல் பணி செய்யவேண்டும் என பேசினோம்” எனக் கூறினார். 

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports