2029 பிரதமர் வேட்பாளர்: விஜய்யா, ராகுலா? காங்கிரஸ் பதில்|Vijay or Rahul for PM? Congress Draws Its Red Line


நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது.

இது தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு நெருடலை ஏற்படுத்தியது. ஏனெனில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி வருகிறது. இது குறித்த கேள்வி தமிழ்நாடு காங்கிரஸைத் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இன்று தவெகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதும், ‘2029-ம் ஆண்டு விஜய் தான் பிரதமர் வேட்பாளரா?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு மாணிக்கம் தாகூர், “‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்காக அமைக்கப்பட்ட மாநிலக் கூட்டணியாகும்.

அதேவேளையில், இதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. எனவே, இந்தக் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியின் ஒரு பகுதியாகவே செயல்படும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Многофункциональная косметологическая платформа https://invasive.ru для салонов красоты и клиник. InMode — полный комплекс востребованных эстетических процедур. Платформа, которая обеспечивает превосходные…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed