நீதிமன்றம் இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கிறோம். என் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்கிறீர்கள். என் சொந்தக் கட்சியிலேயே எனக்கு வேண்டாதவர்களும் எதிரிகளும் இருப்பார்கள். இதெல்லாம் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். யார் இந்தச் செயலைச் செய்திருந்தாலும், அதை அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அறநிலையத்துறை அமைச்சரே இதில் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் துருவித் துருவிக் கேட்டாலும், அதையும் அந்த ரங்கநாதரிடமே விட்டுவிடுகிறேன். நான் தவறு செய்திருந்தால் பெருமாள் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது புகார் அளித்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் புகார் அளித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை தரப்பிலிருந்து என்னை விசாரணைக்கு இன்னும் அழைக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது தொடர்பான கூடுதல் விவரங்களை என் வழக்கறிஞர்தான் தெரிவிக்க வேண்டும். நான் கூற முடியாது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் புகார் அளித்திருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அது குறித்து எனக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை. தகவல் ஏதேனும் வந்தால் தெரிவிக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எங்கள் வழக்கறிஞரும் கட்சியும் முடிவு செய்வார்கள்.”
























