மிசா விவகாரம்: நிர்மல் குமார் பேச்சுக்கு அன்பில் மகேஸ் கடும் பதிலடி|‘Unfit to Speak on MISA’: Former Minister Slams Nirmal Kumar


இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார்.

அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதானார் என்று பேசினார் நிர்மல் குமார்.

நேற்றே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்துப் பேசியிருந்தார். இதுவே விமர்சனங்களைக் கிளப்பியிருந்த நிலையில், இன்று மீண்டும் நிர்மல் குமார் மிசா குறித்தும், ஸ்டாலின் குறித்தும் பேசியுள்ளது திமுகவினரிடையே எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

நிர்மல் குமார்

நிர்மல் குமார்

நிர்மல் குமார் பேச்சு குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “அண்ணல் அம்பேத்கர் அளித்த சட்டத்திற்குத் துறை அமைச்சராகக் காக்கி ட்ரவுசர் போட்டவர் இருக்கிறார்.

இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆரம்பம் முதலே உண்மைக்கு மாறான பொய்யை மட்டுமே நார்சிஸ்ட் மனநிலையில் பேசி வருகிறார்.

குரூர மனம் கொண்டவர்கள் மிசா கொடுமையைப் பற்றிப் பேசச் சிறிதும் தகுதி இல்லாதவர்கள்.

மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தவர்களைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்தான் இன்றைய சட்டத்துறை அமைச்சர்!

அவருக்குத் தலைவன் எனும் சொல்லுக்கே அர்த்தம் தெரியாது!” என்று பதிவிட்டுள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed