<p>இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், துபாயில் இன்று நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தூய்மையான, வெளிப்படைத்தன்மையான அரசின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.</p>
<h2><strong>"தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது"</strong></h2>
<p>தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது ஒரு பெரிய விஷயம். மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வது அரசின் வேலை என்று நான் நம்புகிறேன்.</p>
<p>’குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்பதே எனது மிகப்பெரிய கொள்கை. குடிமக்களிடம் தொழில் மற்றும் ஆற்றல் உணர்வு வளரும் சூழலை உருவாக்குவதை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக உள்ளடக்குவதே எங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது. </p>
<p>இதன் காரணமாக இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50 கோடிக்கும் அதிகமானோர் வங்கியில் இணைந்துள்ளனர். இது இந்தியாவை ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் துறைகளில் முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளோம்.</p>
<h2><strong>"உலகளாவிய தெற்கின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்"</strong></h2>
<p>இன்று, நாம் நம் நாட்டை மாற்றும் போது, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டாமா? வளரும் நாடுகளின் கவலைகளையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். உலகளவில் முடிவெடுப்பதில் உலகளாவிய தெற்கின் பங்கேற்பையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். </p>
<p>உலகளாவிய தெற்கின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவர்களின் முன்னுரிமைகளை முன்வைக்க வேண்டும். தேவைப்படும் நாடுகளுக்கு உதவ வேண்டும். (AI) செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி மற்றும் சைபர் கிரைம் போன்ற வளர்ந்து வரும் சவால்களுக்கு உலகளாவிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும். நாம் நமது தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதோடு சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் பேண வேண்டும்" என்றார்.</p>
<p>இதை தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "10 ஆண்டுகளில், 11வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம். அதே காலகட்டத்தில், நமது சூரிய ஒளி சக்தி திறன் 26 மடங்கு அதிகரித்தது. </p>
<p>நமது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனும் இரட்டிப்பாகியது. மேலும் இது தொடர்பான நமது பாரிஸ் உறுதிமொழிகளை காலக்கெடுவிற்கு முன்னதாகவே எட்டினோம். உலக மக்கள்தொகையில் 17% இந்தியாவில் வசிக்கிறது. ஆனால், நமது கார்பன் வெளியேற்றம் உலக மொத்தத்தில் 4% மட்டுமே உள்ளது" என்றார்.</p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Hahahaha You are so good
Every day is a new beginning
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports













Eline sağlık, faydalı olmuş.