விஜய் அதிமுக, பாமக, பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவன் ஆதரவைக் கேட்டார். ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்துவிட்டு கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று என்னைக் கேட்கிறார்கள். ஏன்? ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்த திருமாவை கூட்டணிக்குள் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேட்கவில்லை.
அவர்தானே எங்களிடம் வந்தார். நாங்கள் அவரிடம் போகவில்லையே. அவருக்கு தான் தேவை இருந்தது. எங்களுக்கு தேவையில்லையே. கூட்டணிக்கு பெயர் வைக்கும்போது சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று சொன்னார்கள்.

வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற குரலை உயர்த்திச் சொன்னவன் திருமாவளவன்.
மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி இப்படித்தான் உருவானது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் விடுதலை சிறுத்தை சொந்தங்களே, யார் விமர்சித்தாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம்” என்று பேசியிருக்கிறார்.
























