INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்;  சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது.

முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 24 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 41/1 ஆக இருந்தது.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்
BCCI

ராகுல் – சாய் சுதர்சனின் வலுவான பார்ட்னர்ஷிப்!

முதல் விக்கெட்டை விரைவில் இழந்தாலும், அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், இந்திய இன்னிங்ஸை வலுவாக கட்டமைத்தார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொறுமையுடன் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. ராகுல் தனது 21-வது டெஸ்ட் அரைசதத்தை கடந்தார், மறுமுனையில் சாய் சுதர்சனும் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில், தனது முதல் சதத்தை நோக்கி முன்னேறிய சாய் சுதர்சன், 81 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed