Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-

EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது ஏன்?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
<p><strong>EPS On Sasikala:</strong> பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.</p> <h2><strong>எடப்பாடி பழனிசாமி விளக்கம்:</strong></h2> <p>மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அதிமுக வேட்பாளர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி…
-

விழுப்புரத்தில் காவல்துறை வாகனம்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்… காவல் ஆய்வாளர் உட்பட 4 காயம்
<p>விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பேருந்தும் காவலர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காவல் உதவி ஆய்வாளர் ஓட்டுனர் என நான்குபேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.</p> <h2>காவல்துறை வாகனம் – அரசு பேருந்து மோதல் </h2> <p>சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி காவலர்கள் வேனில் விழுப்புரம் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது காவலர் வேன் விராட்டிக்குப்பம் சாலை அருகே வந்தபோது எதிர் திசையில் திருச்சியிலிருந்து வந்த…
-

தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Chennai Building Collapse: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனியார் கிளப்பில் பணியாற்றிய ஊழியர்கள் இரண்டு பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின்…
-

Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
<p>டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்து இன்று மாலை முடிவுகள் வெளியாகின. </p> Source link
-

ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசு!
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி…
-

Lok Sabha Election 2024 Kanimozhi Speech At A Campaign Rally In Karur – TNN | அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர்
அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக 10 நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததே, மோடி ஆட்சியின் சாதனை என கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். கரூர் மாநகர், வெங்கமேடு அண்ணா சிலை அருகில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில்…
-

Lok Sabha Elections 2024 Thirumavalavan Says They Refuse To Give Symbols Because They Are In The Opposition – TNN | Lok Sabha Elections 2024: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள்
விழுப்புரம்: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள். இறுதி நேரத்தில் சின்ன மாறும் என யாரும் குழப்பம் அடைய வேண்டாம். நமது சின்னம் பானை தான் என விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டையும்…
-

Lok Sabha Election 2024 Thirumavalavan Says Edappadi Palaniswami Cannot Do Politics Against DMK – TNN | Lok Sabha Election 2024 : திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை
விழுப்புரம்: இந்தியாவிலேயே 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற போவதாகவும், பானை சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேசினார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கூட்டணியிலுள்ள விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி…
-

Lok Sabha Election 2024 Campaign In Support Of AIADMK Candidate In Karur – TNN | திருமாவளவனை நினைத்தால் வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது
திருமாவளவனை நினைத்தால் ஓட்டல் ஊழியரிடம் ஊத்தாப்பம் கேட்ட வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. திமுக கூட்டணியில் 2 தனி தொகுதி, 2 பொதுத் தொகுதி, ராஜ்யசபா பதவி வேண்டும் என்று சீட்டு கேட்ட அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 2 தனி தொகுதி மட்டும்தான் என கூறிவிட்டார் என நடிகை விந்தியா கூறினார். கரூர் மாநகர், வெங்கமேடு பகுதியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு இணை…
-

Lok Sabha Election 2024 Congress Party Candidate Jothimani Filed His Nomination – TNN | ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி
கரூரில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு நழுவி சென்றார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல்…
-

Lok Sabha Election 2024 Congress Candidate Jothimani Speech In Response To Karur Candidate Thangavel – TNN | பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை
கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேலிட பொறுப்பாளர் எம்பி அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, சிபிஎம், சிபிஐ, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…
-

nomination of DMK candidate A raja Nilgiris constituency in the Lok Sabha elections has been accepted after being put on hold | Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு
மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல்: மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சிகள் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று மாலை 3 மணிவரை வேட்புமனு…
-

இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலையை முடக்ககோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் காண Source link
-

TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் – 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!
<p>ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p> <p>அதேபோல் 29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை,…
-

Tamil Nadu latest headlines news till afternoon 28th march 2024 flash news details here | TN Headlines: ரூ.50,000 தொட்ட தங்கம் விலை! 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தின் படி, ”நீதித்துறை செயல்முறைகளைக் கையாளவும், நீதிமன்றத் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் நீதித்துறையின்…
-

Lok Sabha Election 2024 Congress Candidate Jothimani Campaigned In An Open Van In Karur – TNN
கரூரில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த ஜோதிமணி ரூ.44 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு நடத்தி விட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்த…
-

Latest Gold Silver Rate Today march 2 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ. 50,000 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,250 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,760 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,720 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

Mettur Dam’s water flow has reduced from 40 cubic feet to 24 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 40 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 24…
-

பரப்புரை முடிந்த பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு தண்டனையா? தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!
<p>ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.</p> <h2><strong>"தபால் வாக்குகள் பதிவு செய்யும் முறையில் மாற்றம்"</strong></h2> <p>மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில்…
-

"பாஜக அலுவலகமாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம்" விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம்!
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், பானை சின்னத்தை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி மேற்கொண்டது.</p> <h2><strong>தேர்தல் ஆணையத்தின் முடிவால் விசிக ஷாக்:</strong></h2> <p>கடந்த இரண்டு தேர்தல்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. எனவே, அதே சின்னத்தை பெற அக்கட்சி முனைப்பு காட்டியது. இதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
-

”மோடியை விடுங்க ஆளுநர் பற்றி பேச மறுப்பது ஏன்?” எடப்பாடி பழனிசாமியை பொளந்து எடுத்த ஸ்டாலின்!
இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. ”மக்களின் ஆதரவு தான் திராவிட மாடல் அரசின் சாதனை” அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று விருதுநகர், தென்காசியில் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில்…
-

TN BJP Leader Sounth Chennai BJP Candidate 2024 Tamilisai Soundadrrajan Assets Details Movable Immovable Assets
புதுச்சேரி, தெலங்கானா ஆகிய இரண்டுக்குமே ஆளுநராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். தமிழ்நாட்டி போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியைத் துறந்து சென்னை திரும்பினார். அடிப்படையில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறங்குகிறார். இந்த நிலையில் அவர் பெயரிலும் அவரின் கணவர் செளந்தர்ராஜன் பெயரிலும் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவு? பார்க்கலாம். தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி ரூபாயும், அசையா சொத்து 60…
-

விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுப்பு.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
Pot Symbol: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் காண Source link
-

Lok sabha Election: மொத்தம் 834 பேர்
Lok sabha Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு: 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போடிட்யிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான அவகாசம் இன்று…
-

Lok Sabha Election 2024 Aggressive campaign on behalf of AIADMK ahead of Karur Parliamentary Elections – TNN | அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக செய்ததுபோல் பேசுகிறார்கள்
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருகின்றனர் என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார். கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கா பரமத்தி கடைவீதி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில்…
-

TN BJP Leader Coimbatore BJP Candidate 2024 Annamalai Assets Details Movable Immovable Assets
விவசாயி, முன்னாள் ஐபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் எனப் பல முகங்களைக் கொண்ட அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டி இடுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்துக் காணலாம். அண்ணாமலை சொத்து மதிப்பு அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4,100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும்…
-

Video : திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு’ ரிங்டோன்! செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்!
<p><strong>Seeman:</strong> ‘மைக்’ சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். </p> <p>ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.</p> <h2><strong>’மைக்’…
-

Karur minister should go to Tihar Jail BJP Annamalai warns – TNN | மீண்டும் டோக்கன் கொடுக்க முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும்
இலவச டப்பா, வெள்ளியே இல்லாத கொலுசு, டோக்கன் கொடுக்க மீண்டும் முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என பாஜக அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் செயல் வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,…
-

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..
<p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>…
-

Karur crime woman who issued a fake visa claiming to get a job in London – TNN | லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி விசா வழங்கிய பெண்?
லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் வாங்கிக் கொண்டு போலியான விசா வழங்கியதாக பெண் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ படித்து விட்டு ஆங்கிலம் கற்பதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஸ்போக்கன் இங்கிலீஸ் படித்து…
-

Tamil Nadu latest headlines news till afternoon 27th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு; அண்ணாமலை, எம்.பி திரும வேட்புமனு தாக்கல்
கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அண்ணாமலை வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அண்ணாமலை. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் படிக்க PMK Manifesto: மகளிருக்கு மாதம் ரூ.3000,…
-

Lok Sabha Elections 2024: விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் விதிமுறை மீறல் – 27 பேர் மீது வழக்குப்பதிவு
<p style="text-align: justify;"><strong>விழுப்புரம் :</strong> விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p> <p style="text-align: justify;">விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி நாம் தமிழர்…
-

Lok Sabha Election 2024 CV Shanmugam Says AIADMK Begged BJP To Get Four Legislators – TNN | Lok Sabha Election 2024: அதிமுக போட்ட பிச்சையால் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசியதாவது: பொன்முடிக்கு அடக்கம் தேவை ஜெயிலுக்கு செல்ல வேண்டிய பொன்முடி நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் அமைச்சராகியுள்ளார். அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறார். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காவல் துறையும்…
-

Lok Sabha Election 2024 Electronic Voting Machines Were Sent To All 8 Assembly Constituencies With Proper Security In Tiruvannamalai – TNN
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 2024-ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்…
-

Mettur dam’s water flow which is rapidly collapsing – this is the water situation today. | Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 90 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 40…
-

Loksabha Election 2024: விறுவிறு வேகம்.. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.. இன்று கடைசி நாள்..
<p>தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது.</p> <p>நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல…
-

Lok Sabha Election 2024 AIADMK Filed A Complaint Against Minister Ponmudi In The Election Commission For Violating The Election Norms | Lok Sabha Election 2024: அமைச்சர் பொன்முடி மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கூட்டணி கட்சி சின்னத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் அலுவலத்திற்கு வந்ததாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகாரளித்துள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார்…
-

திருப்பத்தூர் மக்களுக்கு அமைச்சர் உதயநிதி அளித்த ஸ்பெஷல் வாக்குறுதி.. என்ன தெரியுமா?
<p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு, ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது.</p> <h2><strong>எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:</strong></h2> <p>வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21…
-

”பிரதமர் மோடி விஷ்வ குருவா? மவுன குருவா?” தூத்துக்குடி பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.…
-

Thamizhachi Thangapandian : கீழே விழுந்ததால் கால் முறிவு.. தேர்தல் களத்திற்கு ஊன்றுகோலோடு வந்த தமிழச்சி தங்கப்பாண்டியன்!
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போல், இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.</p> <h2><strong>எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:</strong></h2> <p>வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல்…
-

Lok Sabha Election 2024: ஆரணி தொகுதியில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பாமக, திமுக, அதிமுக வேட்பாளர்கள்
<p style="text-align: justify;">வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பாமக சார்பில் வேட்பாளர் கணேஷ்குமார் அண்ணாசிலையிலிருந்து காந்தி ரோடு மார்க்கெட் வீதியில் டிராக்டரை ஓட்டி வேட்பாளர் கணேஷ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். </p> <p style="text-align: justify;">பின்னர் பழைய பேருந்து நிலையம் கோட்டை வீதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் தனது வேட்பு மனு…
-

Lok Sabha Election 2024: 2 அரசும் சதிவேலைகளை செய்து சின்னத்தை பறித்துள்ளன – இயக்குநர் களஞ்சியம்
<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். </p> <h2 style="text-align: justify;">இயக்குனர் களஞ்சியம் வேட்புமனு தாக்கல் </h2> <p style="text-align: justify;">விழுப்புரம் பாராளுமன்ற தனித் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களஞ்சியம் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின்…
-

Lok Sabha Election 2024: அண்ணாதுரையை ஜெயிக்க வைத்தால் தொகுதிக்கு வந்து உங்களது குறைகளை தீர்த்து வைப்பேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
<p style="text-align: justify;">தமிழக மக்களுக்கு விடியல் வரவேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p> <p style="text-align: justify;">திருவண்ணாமலை பாராளுமன்ற திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை ஆதரித்து இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக உரையாற்றினார். <strong>இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “</strong>கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று லட்சத்திற்கும் மேல்…
-

Lok Sabha Election 2024 BJP Candidate Namachivayam Paid A Courtesy Call On Bamaka Founder Ramadas At His Residence In Thilapuram – TNN | Lok Sabha Election 2024: புதுச்சேரி எம்.பியாக இவர்தான் வர போகிறார்
விழுப்புரம்: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததையடுத்து நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி என கூறி ஆப்பிளை வழங்கினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கூட்டணி வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காண்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல்…
-

கரூரில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?
<p style="text-align: justify;"><strong>கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக, அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</strong></p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;"> </p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/ff05b611d0cc8eb2ecc5ed2f1e9963d41711435105594113_original.jpeg" /></p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம்…
-

Tamil Nadu latest headlines news till afternoon 26th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு; 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
Lok Sabha Election: பங்குனி உத்திர சிறப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்! வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஞாயிற்று கிழமை வரை சிலரே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக, நேற்று ஒரே நாளில் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று, பங்குனி உத்திரம் தினம் என்பதால், அதிகமான வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும்…
-

Lok Sabha Election: பங்குனி உத்திர சிறப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்!
<p>பங்குனி உத்திர தினத்தையொட்டி, நேற்று ஒரு நாளில் மட்டும் 405 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள்னர். </p> <h2><strong>மக்களவை தேர்தல்:</strong></h2> <p>தமிழ்நாட்டில், முதற்கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 மற்றும் ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.</p>…
-

MDMK Symbol: 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் என்ற தேர்தல் ஆணையம்; சோகத்தில் மதிமுக
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு பம்பரம் சின்னம் வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்திருந்தது. சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பம்பரம் சின்னம் பொது பட்டியலில் உள்ளதா என தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/