தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தலைமையில் புதியக் கூட்டணியை உருவாக்குவதற்கான கூட்டம் தான் அது என்றார்கள்.

அடுத்து நடைபெறக்கூடிய உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களை இந்தக் கூட்டணியின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 9 ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது என்று எங்களிடம் தெரிவித்தார்கள்.
























