கார்த்தி, “நான் 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, இரவு முழுவதும் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பேன். படிக்காமல் இருந்தாலும்கூட, என் கையில் புத்தகத்தை எப்போதும் வைத்திருப்பேன்.
வீட்டில் நான் நல்லவன் என்கிற தோற்றத்தை உருவாக்க அப்படிச் செய்துகொண்டிருப்பேன் (சிரித்துக்கொண்டே…). அப்போது, சூர்யா அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.
தினமும் படம் பார்க்கச் செல்வது, நண்பர்களுடன் செல்வது என எப்போதும் சுற்றிக்கொண்டேதான் இருப்பார். அப்போது, ‘எங்கு சுற்றினாலும், எங்கு சென்றாலும் இரவில் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்’ என எங்களின் தந்தை கண்டிஷன் போட்டுவிட்டார்.

இரவு வெளியே தங்குவதை அவர் அனுமதிக்கமாட்டார். வீட்டின் கதவுகள் இரவு 12 மணிக்குப் பூட்டப்படும். நான் 12 மணி வரை விழித்துத்தான் இருப்பேன்.
சூர்யா அண்ணா வந்து கதவைத் திறப்பார். அப்போது சத்தம் கேட்டதும் உடனடியாக அண்ணனை அப்பாவிடம் மாட்டிவிட்டுவிடுவேன்.
பிறகு என் அப்பா சென்று, என் அண்ணனைத் திட்டிக்கொண்டிருப்பார். முதலில் அப்பாவாகவே தூக்கத்திலிருந்து எழுந்து வந்து தன்னைத் திட்டுவதாக அண்ணா நினைத்துக்கொண்டிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகுதான், அவரைச் சிக்க வைத்தது நான்தான் என்பது அவருக்குத் தெரியவந்தது” எனப் பகிர்ந்திருக்கிறார்.
























