விஜய் - ராகுல் காந்தி


சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “சுதந்திரப் போராட்ட தியாகியும், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் தலைவர் ராமசாமி படையாட்சியார். ராமசாமி படையாட்சியார் தன் மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் எந்தவொரு கருத்தையும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பதிவு செய்யக்கூடியவர்.

அத்தகைய துணிச்சலும் ஆளுமையும் இன்றைய அரசியல் சூழலில் குறைந்திருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

விஜய் – ராகுல் காந்தி

அரசு கொண்டுவரும் ஐந்து ஆண்டுகள் திட்டங்களோ அல்லது எதிர்காலத் திட்டங்களோ எதுவாக இருந்தாலும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மக்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் நேரில் சென்று மக்களைச் சந்தித்து, முதல்வர் வேண்டாமென முடிவெடுத்தது போல, ஏனைய திட்டங்களிலும் மக்களிடம் ஏன் கருத்து கேட்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களின் நலனுக்காகத் தங்கள் ஆளுமையுடன் குரல் கொடுத்து வருகின்றன.

அதேபோன்று, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களுக்காகத் தைரியமாகத் குரல் கொடுக்க வேண்டும். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணிக் கட்சிகள், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவரை பிரதமராக ஏற்கவில்லை எனில், இந்தக் கூட்டணி தொடர்வதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? தலைவர் ராமசாமி படையாட்சியாரின் இந்தப் பிறந்த நாளில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் நேர்மையான நிலையை வலியுறுத்திச் சபதம் ஏற்போம்” என்றார்



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports