அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று முன்பு கூறினார்.
அவரும் அதிபரானதிலிருந்து எத்தனையோ முயற்சிகள் செய்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.
இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிகளை விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா.
அப்போதும் ரஷ்யா வழிக்கு வரவில்லை.

ரஷ்யாவிற்கு இன்னும் நெருக்கடியைக் கூட்ட, லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026 அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் வளையத்திற்குள் முக்கியமாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் சிக்கும்.
இந்தச் சட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்பவர்கள் மீதும் பாயும்.
























