Tag: ப்ரித்விராஜ்

  • the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him

    the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him


    தான் தயாரித்த முதல் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வழங்கிய காசோலையை தூக்கி வீசியதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
    ப்ரித்விராஜ்
    20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ப்ரித்விராஜ். இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ப்ரித்விராஜின் கடின உழைப்பும் காத்திருப்பிற்கும் பின்பு தற்போது திரையரங்கில்  வெளியாக இருக்கும் படம் தி கோட் லைஃப் (The Goat Life).
    தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்கிற தலைப்பில் இப்படம் வெளியாகிறது. அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.
    கேரளத்தில் இருந்து செளதிக்கு வேலைத் தேடிச் சென்ற நஜீப் முகமத் என்பவர் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக மாட்டிக்கொண்ட உண்மைக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜ் தெரிவித்திருப்பதாவது:
    16 ஆண்டுகால காத்திருப்பு!
    கடந்த 2008ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைப் பணிகள் தொடங்கி  2018ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த அறிவிப்பு வெளியாகி இன்றைய நாள்வரை மொத்தம் 16 ஆண்டுகளை இந்தப் படத்திற்காக தங்களை அர்பணித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இது தொடர்பாக பேசிய ப்ரித்விராஜ் “ 2008இல் இந்தப் படத்தை இயக்குநர் ப்ளெஸ்ஸி  எடுக்க நினைத்தபோதே அவரிடம் நிறைய திட்டங்கள் இருந்தன.
    வெளிநாட்டில் நிஜ பாலைவனத்தில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இத்தனை ஆண்டுகால தாமதம் என்பது ஒரு வகையில் நல்லது என்றுதான் நான் சொல்வேன். 2008இல் எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் தயாரிப்பாளர் இல்லை. ஆனால் 2018இல் இந்தப் படம் தொடங்கியபோது சினிமாவில் எனக்கு ஒரு பார்வையும் அனுபவமும் ஏற்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் வேறு ஒரு மனிதாக மாறி இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
    செக்கை தூக்கி எறிந்த பிரகாஷ் ராஜ்
    மேலும் தமிழில் தான் நடித்த படங்களில் தான் திரும்பி பார்க்க விரும்பும் படமாக மொழி இருப்பதாக தெரிவித்த ப்ரித்விராஜ், “ மொழி படம் ஒரு மாடர்ன் கிளாசிக். ஒலியைக் கேட்க முடியாத ஒரு பெண், ஒலியை கொண்டாடும் ஒருவன். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காதலை படமாக்கியிருப்பார் ராதா மோகன்.
    இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் பிரகாஷ் ராஜ் தான். இந்தப் படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். மொழி படத்திற்கு பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம். நான் தயாரித்த ‘9’ படங்களில் அவர் நடித்தார். அதற்காக அவருக்கு செக் கொடுத்தபோது ”என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்ப?” என்று சொல்லி அதைத் தூக்கி எறிந்தார். என்னை எப்போதுமே வேறு ஒருவனாக அவர் பார்க்கவே மாட்டார் “ என்று ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.

    மேலும் காண

    Source link

  • musician ar rahman praised The Goat Life movie

    musician ar rahman praised The Goat Life movie


    ‘தி கோட் லைஃப்’
    மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தி கோட் லைஃப்’ (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
    இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது.
    தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் மார்ச் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 
    மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது படமாகியுள்ள இந்த கதை காட்சி ரீதியாகவும் நடிப்பு ரீதியாகும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ”காலம் கடந்து நிற்கக்கூடிய இசை”
    பல்வேறு சவால்களுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ள படக்குழு ஒவ்வொரு காட்சியாக படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள்.  இந்தநிலையில், தி கோட் லைஃப் படம் குறித்து சில விஷயங்களை ஏபிபிவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
    அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, ”கோட் லைஃப் படத்தின் கதை அற்புதமானது. உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் கோட் லைஃப்.  இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட படம் ஒரு பரிசு. மிகவும் பிரம்மாண்டமான படம் இது. இந்த படத்திற்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். மக்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.
    ஆஸ்கர் விருது என்பது நல்ல விஷயம். ஆனால், விருது மட்டும் உங்கள் வேலையை அங்கீகரிக்காது. சில வேலைகள் எல்லாம் காலம் கடத்தும் பாராட்டப்படும். இந்த படத்தில் இசை என்பது தற்காலத்திற்கேற்ப அமைக்கவில்லை. காலம் கடந்து நிற்கக்கூடிய வகையில் இசை அமைக்கப்பட்டுள்ளது. 
    இந்த படத்தில் எனக்கு பெரியோனே பாடல் பிடித்திருக்கிறது. அதோடு, Hope பாடல் புதிதான ஒன்று. அனைத்து மொழிகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் hope பாடல். இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் இருந்து எந்த மாதிரியான கருத்துகள் வரும் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த பாடலின் இசை மற்றும் வீடியோவை மக்கள் பார்த்தால் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

    மேலும் காண

    Source link