Tag: பீகார் முதலமைச்சர்

  • BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

    BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்


    Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்:
    பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது தேசிய அரசியலில் பெடும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார்.
    செயல்திறன் அதிகரிக்கும் – நிதிஷ் குமார்:
    இதுதொடர்பாக பேசிய நிதிஷ் குமார், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நேர்மறையானது மற்றும் வரவேற்பதற்கு தகுதியானது.  மூன்று புதிய பொருளாதார வழித்தடங்கள் அமைக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது.  இவை தளவாட செயல்திறனை கொண்டு வருவதோஉட்,  நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும். 
    நடுத்தர வகுப்பினருக்காக சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் அரசின் முடிவு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதன் மூலம், வாடகை வீடுகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வரிப் பிரிவில் ஓராண்டு விலக்கு அளிக்கப்படுவது தொழில் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். MNREGA பட்ஜெட் அதிகரிப்பு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பட்ஜெட்டில் உயர்கல்விக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டு, இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்” என நிதிஷ் குமார் பாராட்டியுள்ளார். இதனிடையே, பீகார் மாநிலத்தின் பட்ஜெட் கூடத்தொடர், பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    இதையும் படிங்க: டெலிகிராம் யூஸ் பண்றீங்களா? ஜாக்கிரதை – குறுஞ்செய்தியை நம்பிய பட்டதாரி வாலிபருக்கு நேர்ந்த கொடுமை
    எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இதேபோன்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டில்  விரிவான அறிவிப்புகள் எதுவுமில்லை என சாடி வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த வாரம் வரை பாஜகவை வீழ்த்துவோம் என பேசி வந்த நிதிஷ்குமார், தற்போது பட்ஜெட்டை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் காண

    Source link

  • Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

    Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

    Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்:
    பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இப்படி திடீர் திடிரென கூட்டணியை முறித்துக் கொள்வது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதல்ல. அப்படிபட்ட முடிவுகளால் கடந்த 24 ஆண்டுகளில் 9 முறை நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் இவரை பல்டிமார் என விமர்சிப்பதும் உண்டு. அந்த வகையில் கடந்த காலங்களில் அவர் எடுத்த பல தடாலடியான முடிவுகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 
    மார்ச் 2000 : ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக ஆதரவுடன் மார்ச் 3, 2000 அன்று நிதிஷ்குமார் முதல் முறையாக முதலமைச்சரானார். ஆனால், ஏழு நாட்கள் மட்டுமே அவர் ஆட்சி நீடித்தது. 2003 ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் ஷரத் யாதவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்கினார்.
    நவம்பர் 2005: நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் 2005ம் ஆண்டில் பீகார் முதலமைச்சராக பதவியேற்று ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
    நவம்பர் 2010: மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார், ஆனால் இந்த முறை அவரது ஆட்சி மே 19, 2014 வரை வெறும் 3.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2013 இல் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராஅக் முன்னிறுத்தப்பட்டபோதை எதிர்த்து,  NDA உடனான 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டார்.
    பிப்ரவரி 2015:  RJD மற்றும் காங்கிரஸுடன் கைகோர்த்து, 2015 இல் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானார். இருப்பினும், அவர் 2017 இல் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆனாலும், மீதமிருந்த 8 மாத ஆட்சிக் காலத்தை அவரது அரசு பூர்த்தி செய்தது.
    நவம்பர் 2015 : ஆர்ஜேடியின் உதவியுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த அரசாங்கம் 1 வருடம் 8 மாதங்கள் மட்டுமே நீடித்தது. 
    ஜூலை 2017 : பாஜக உதவியுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் நீடித்தது.
    நவம்பர் 2020: சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை இந்த கூட்டணியின் ஆட்சி ஆகஸ்ட் 2022 வரை நீடித்தது.
    ஆகஸ்ட் 2022: பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் RJD மற்றும் காங்கிரஸ் உதவியுடன் பீகார் முதலமைச்சரானார் நிதிஷ் குமார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்த ஆட்சி  ஜனவரி 28, 2024 வரை நீடித்தது. அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே, நேற்று மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.

    Source link

  • Nitish Kumar To Continue As Bihar Chief Minister, 2 Deputies From BJP Likely: Sources

    Nitish Kumar To Continue As Bihar Chief Minister, 2 Deputies From BJP Likely: Sources

    Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், I.N.D.I.A.  கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி?
    நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது முறையாக, அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பீகாரில் உள்ள தனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம்  நாளை மாலை 4 மணிக்கு பாட்னாவில் நடைபெற உள்ளது.
    பாஜகவிற்கு அமைச்சரவையில் இடம்?
    பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்புவதன் பின்னணியில் பல கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ”கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். மக்களவை தேர்தலின் போது கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறையும் என்றும் கூறப்படுகிறது. 2019ல் நிதிஷ்குமாரின் கட்சி 17ல் போட்டியிட்டு 16 இடங்களை வென்றது. ஆனால் இப்போது 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்” என்பது போன்ற நிபந்தனைகளை ஏற்றே, பாஜக உடன் மீண்டும் அவர் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பீகாரில் ஆட்சி கலைகிறதா?
    நிதிஷ்குமாரின் இந்த கூட்டணி தாவலால் பீகாரில் ஆட்சி கவிழுமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் பீகாரில்  சட்டமன்றம் கலைக்கப்படாது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் எப்படியும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எந்தக் கட்சியும் ஆட்சி கலைப்பு நடவடிக்கைக்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. அதேநேரம், அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவை தேர்தல் மீது உடனடியாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நொறுங்கும் INDIA கூட்டணி:
     எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.  இதன் வெளிப்பாடாகவே, I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். இந்நிலையில் தான் அவர் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவில் இணையப் போவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாபில்  தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது. இந்நிலையில் நிதிஷ்குமாரும் கூட்டணி மாற்றம், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

    Source link