Tag: பட்ஜெட் 2024 செய்திகள்

  • Modi government’s last budget? Interim Budget Session of Parliament begins today | Budget 2024: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்

    Modi government’s last budget? Interim Budget Session of Parliament begins today | Budget 2024: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்


    Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
    இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்:
    ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 9ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, நேற்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    பட்ஜெட்டில் என்ன இருக்கும்?
    தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இந்த,  இடைக்கால பட்ஜெட்டில்,  கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும்.
    பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
    தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பில் பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
    மோடி அரசின் கடைசி பட்ஜெட்டா?
    பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் அணி தான், 2024-25 நிதியாண்டிற்கான விரிவான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நாட்டிலேயே அதிகமுறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன் நாளை பெறுவார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமயையும் பெற உள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Ahead Of Interim Budget 2024 Session Govt Calls All-party Meeting Today | Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

    Ahead Of Interim Budget 2024 Session Govt Calls All-party Meeting Today | Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

    Budget Meeting: நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
    பட்ஜெட் கூட்டத்தொடர்:
    ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 1ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
    நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்:
    இந்நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து தரப்பினரும், ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.
    இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
    தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. இந்த, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் இடம்பெறும்.
    வரலாறு படைக்க உள்ள நிர்மலா சீதாராமன்:
    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடிக்க உள்ளார்.
    நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:
    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக, இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார். இந்திரா காந்திக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது.

    Source link

  • Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Union Budget 2024: இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார்.
    இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.
    நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்:
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடித்துள்ளார்.
    நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:
    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக,  இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.
    பிரதமர் மோடி அரசின் பட்ஜெட்:
    2014ல் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, நிதியமைச்சகராக பொறுப்பேற்ற அருண் ஜெட்லி, 2014-15 முதல் 2018-19 வரை தொடர்ச்சியாக ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அவரது உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த பியூஷ் கோயல், 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மோடி 2.0 அரசாங்கத்தில், சீதாராமனுக்கு நிதித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. 1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

    Source link