விழுப்புரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் 2024 பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிக அளவில் புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வருகிற 12.01.2024. 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய நாள்களில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 12.01.2024 அன்று 539 சிறப்பு பேருந்துகள் 13.01.2024 மற்றும் 14.01.2024 அன்று 1090 சிறப்பு பேருந்துகள் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல https://www.tnstc.in/home.html என்ற இனையத்தில் முன் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tag: வேலை நிறுத்தம்

Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Bus Strike Protest In Front Of Villupuram Government Transport Corporation Office For Second Day – TNN
விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் துண்டை விரித்து போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிலிம் சிட்டிக்கு ஏன் 540 கோடி ஒதுக்க வேண்டும், கார் ரேசுக்கு 450கோடி ஒதுக்கும் போது எங்கள் பணத்திற்கு நாங்கள் ஏன் கையேந்தி நிற்க வேண்டுமென கையில் பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து பணிமனை வாயில் முன்பாக தரையில் அமர்ந்து துண்டை விரித்து போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
TN Bus Strike: தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர், வெளியூர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பேருந்து போக்குவரத்து சீராக உள்ளது”:
காபோக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர், பொது மக்கள் பாதுப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2-வது நாளாக இன்றும் (10.01.2024) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.
த.நா.அ.போ. கழகம்
இயக்கப்பட வேண்டிய பேருந்துகள்
இயக்கப்படும் பேருந்துகள்
இயக்க சதவிகிதம்
மாநகர போக்குவரத்து கழகம்
3,233
3,210
99.29
அரசு விரைவு போக்குவரத்து கழகம்
89
89
100.00
விழுப்புரம்
2,359
2,278
96.57
சேலம்
1,249
1,222
97.84
கோயம்புத்தூர்
2,159
2,095
97.04
கும்பகோணம்
3,143
3,070
97.68
மதுரை
2,166
2,134
98.52
திருநெல்வேலி
1,630
1,624
99.63
மொத்தம்
16,028
15,722
98.09%
எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Minister Sivashankar Inspects Villupuram New Bus Station
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் பொங்கல் பண்டிகை வரை வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும் அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமெனவும் தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவோம் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்து பயணிகளிடம் போதிய அளவு பேருந்துகள் இருக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தொடர்ந்து பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டாலும் பேருந்துகள் இயல்பு நிலையிலையே தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் எதிர்பார்த்து வந்த பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் பொங்கல் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் பேருந்துகள் இயக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசியவர், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்பொழுதும் அரசு தயாராக உள்ளதாகவும், போக்குவரத்து துறையிலுள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்காணல் நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் இதற்கான அறிவிப்புகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது, அவர்களுக்கு தெரிந்தும் ஏன் இதனை அறிந்தும் அவர்கள் தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சியில் 5 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக ஆட்சியில் 14 ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கவில்லை என்றும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது, அதிமுக ஆட்சியில் 8 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்யாமலேயே 20 சதவிகிதம் போனஸை தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ள நிலையில் இவர்களின் கோரிக்கையையும் முதல்வர் நிறைவேற்றி தருவார் என்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரமாட்டோம் என்று கூறவில்லை, அதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்றுதான் கேட்பதாகவும் மக்கள் விரோத தொழிலாளர் நல விரோத அரசாக திமுக அரசு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களில் சென்று கொண்டாட எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்றும் அதிமுக ஆட்சியில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்படாத நிலையில் திமுக ஆட்சியில் 800 பேருக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிதி நிலைமை சரியான பிறகு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என்று அரசு கூறிய பின்பும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் பணிக்கு வராத இடத்தில் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
Bus Strike: விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர், 758 கிராமப்புற பேருந்துகள் இயக்கம்
Villupuram Bus Strike You Will Get A Statue In The Marina For Driving The Buses – TNN | Bus Strike: பேருந்துகளை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படும்
விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படுமென நூதன முறையில் பதாகை ஏந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மூன்று பணிமனைகளில் 288 அரசு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று பணிமனைகளில் 800 பேர் பணி புரிந்து வருகின்ற நிலையில் 600 பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராம புறங்களுக்கு இயக்கப்படும் 50 பேருந்துகளில் 35 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராம புறங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராம புறங்களிலிருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளில் அதிகளவு பயணிகள் பயணிக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் குறைந்த அளவே பயணிகளே காணபடுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படுமென நூதன முறையில் பதாகை ஏந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போக்குவரத்து பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பேருந்து நிலைய வாயிலில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டவர்களை போலீசார் அப்புறத்தி அமைதியான முறையில் எதிர்ப்பினை தெரிவிக்க வலியுறுத்தியதை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தினை கைவிட்டு சென்றனர். மேலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதால் பணிக்கு வராமல் உள்ளவர்களை பணிக்கு வந்தால் தங்களின் மீதுள்ள மெமோக்கள் ரத்து செய்யப்படுமென கூறி அதிகாரிகள் பணிக்கு அழைப்பதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சேலம் கோட்டத்தில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்
<p style="text-align: justify;">தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளை கொண்டு பேருந்துகள் இயக்கும் நடவடிக்கையில் அரசு போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காலை 5 மணி நிலவரப்படி 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்கள் செல்லும் பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருவதாக சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/9c4133d06d1733bd27fa3af321027cef1704774295492113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;">இருப்பினும் இன்று காலை முதல் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் இயக்குவதற்கு ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனாலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி சொந்த மாவட்டங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். </p>
<p style="text-align: justify;">இதனிடையே சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் செல்லும் பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும், கூடுதல் ஓட்டுநர் நடத்துனர்களைக் கொண்டு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக சேலம் அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/d9065ac2c3aee2f80892ab0ec054862d1704774274006113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;">இதன் ஒரு பகுதியாக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் கோட்ட பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும்பொறை போராட்டமானது தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோது 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவது எப்படி? தனியார் பேருந்து ஓட்டுநர்கள், டெம்போ ஓட்டுநர்கள் போன்ற இதர ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் என அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் திரளான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>




