Tag: ஆர். என்.ரவி

  • 22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin

    22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin


    இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொன்முடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 
    கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    இதனை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன்,  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடி அமைச்சர் பதவி இழந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இதனை தொடர்ந்து அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். ஆனால் தண்டனை நிறுத்து வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வரவில்லை என கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.
    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஆளுநர் என்ன செய்கிறார் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
    பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    #BREAKING Attorney General tells #SupremeCourt that Tamil Nadu Governor RN Ravi has agreed to invite Ponmudi for being sworn in as a Minister of the State today. pic.twitter.com/EnirK9yZly
    — Live Law (@LiveLawIndia) March 22, 2024

    நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஒரு நாள் கெடு விதித்ததையடுத்து இன்று பிற்பகல் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் ஆளுநர் எந்த செயலையும் செய்யவில்லை என ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜென்ரல் உச்சநீதிமன்றதில் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் அமைச்சராக பதவியேற்கு பொன்முடிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி துறையை ஒதுக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொன்முடி பதவி இழந்த நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது உயர் கல்வித்துறை பொன்முடிக்கு ஒதுக்கப்படும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case

    Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case


    Ponmudi Case: திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
    ஆளுங்கட்சி – ஆளுநர் மோதல்:
    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளது.
    மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுடன் ஆளுநர் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் அரசு இயந்திரம் முடங்கும் அளவுக்கு பிரச்னை வெடித்துள்ளது. இந்த நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்த விவகாரம் புயலை கிளப்பியது. 
    பொன்முடி வழக்கின் பின்னணி என்ன? 
    சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தி.மு.க. தலைவர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது.
    இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க திமுக முடிவு செய்தது.
    எனவே, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பொன்முடி விவகாரத்தில் தி.மு.க. உச்ச நீதிமன்றத்தை நாடியது. தி.மு.க. தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு, ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.
    ஆளுநரை புரட்டி எடுத்த உச்ச நீதிமன்றம்:
    தனது செயல்கள் மூலம்  உச்ச நீதிமன்றத்தை மீறி ஆளுநர் நடந்து கொள்கிறார் என கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், “ஆளுநரின் செயல்கள் எங்களுக்கு அதிக கவலைகளை தருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற மறுக்கிறார். தண்டனைக்கு தடை விதிக்கும்போது, இந்த விவகாரத்தில் வேறு விதமான முடிவை எடுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.
    நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இங்கு சட்டத்தின்படிதான், ஆட்சி நடக்கிறதா? அரசியல் சாசன பதவியில் இருப்பவர் எப்படி இப்படி கூற முடியும். ஆளுநர் என்பவர் பெயர் அளவுக்கு மட்டும் நிர்வாக தலைவராக இருக்கிறார். அவரால் அரசுக்கு அறிவுரை மட்டுமே வழங்க முடியும். அவ்வளவுதான்” என்றார்.
    தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “இந்த அரசியல் சாசன தவறை சரி செய்ய ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் அளிக்கிறோம். நாளைக்குள் அவரிடம் இருந்து ஏதாவது பாசிட்டிவ்வான தகவல் வரவில்லை என்றால், இந்த விவகாரத்தில் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம்” என்றார்.
     

    மேலும் காண

    Source link

  • Ponmudi: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: தமிழ்நாடு ஆளுநர் ரவி சுளீர்!

    Ponmudi: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: தமிழ்நாடு ஆளுநர் ரவி சுளீர்!


    திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
    சிக்கி தவிக்கும் பொன்முடி:
    கடந்தாண்டு டிசம்பர் மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
    3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காரணத்தால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியை குற்றவாளியாக அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க திமுக முடிவு எடுத்தது.
    தமிழ்நாடு ஆளுநரின் முடிவுக்கு காரணம் என்ன?
    எனவே, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என  ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
    அந்த கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
    வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானபோது, பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என முதலில் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
    இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை எனவும் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.    
    இதையும் படிக்க: Electoral Bonds: திமுகவுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கிய லாட்டரி கிங்.. பகீர் கிளப்பும் தேர்தல் பத்திரம்!

    மேலும் காண

    Source link

  • Governor RN Ravi Dropout Vice Chancellor Search Committee | Governor RN Ravi: துணைவேந்தருக்கான தேடுதல் குழு: திரும்ப பெற்ற ஆளுநர் ரவி

    Governor RN Ravi Dropout Vice Chancellor Search Committee | Governor RN Ravi: துணைவேந்தருக்கான தேடுதல் குழு: திரும்ப பெற்ற ஆளுநர் ரவி

    பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிக்கை தெரிவித்துள்ளது.
     
    தற்போது சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்காக  துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து ஆளுநர் ஆர். என்.ரவி உத்தரவிட்டார். இந்த குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 
     
    வழக்கமாக மாநில அரசே, துணை வேந்தர்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். ஆனால், முதன் முறையாக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றிருந்தார்.
     
    இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநரின் நடவடிக்கை குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றார். இது தொடர்பாக  தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தில், “துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசி-யின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல்குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
     
    இருப்பினும் ஆளுநர், தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அவர் சம்பந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர்களைக்கொண்ட நான்கு பேர் அடங்கிய தனித் தனிக் குழுக்களை, துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை முதலமைசர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதேநேரம் உச்சநீதிமன்ற விசாரணையில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசும், ஆளுநரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்றது.துணைவேந்தர்களை தேடுதல் செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதியை நீக்கி தமிழக அரசால் அரசாணை வெளியிட்டப்பட்டது.  
     
    இந்த சூழலில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெறுவதாக ஆளுநர் மாளிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது. 
     

    Source link