Narendra Modi: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு


Narendra Modi: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக – காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டிவீட்:
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு எப்படி விட்டுக் கொடுத்தது என்பது தொடர்பாக,  ஆங்கில நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ பேச்சு வார்த்தைகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளன. காங்கிரசும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
 

Rhetoric aside, DMK has done NOTHING to safeguard Tamil Nadu’s interests. New details emerging on #Katchatheevu have UNMASKED the DMK’s double standards totally. Congress and DMK are family units. They only care that their own sons and daughters rise. They don’t care for anyone…
— Narendra Modi (@narendramodi) April 1, 2024

 
 
 
 
 
 
 

மேலும் காண

Source link