Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன்


<p>ஆம் ஆத்மி கட்யின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால்.&nbsp;மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இது ஆறாவது முறையாகும்.</p>
<p>கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய இருவர் சிறையில் உள்ளனர். ஆனால் ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.&nbsp;</p>
<p>பிப்ரவரி 7 அன்று, கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் பேரில் பிப்ரவரி 17 ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link