Month: February 2024

  • Villupuram news women molested and killed gingee hill fort has been sentenced to life imprisonment – TNN | செஞ்சி மலைக்கோட்டையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை
    Villupuram news women molested and killed gingee hill fort has been sentenced to life imprisonment – TNN | செஞ்சி மலைக்கோட்டையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை


    விழுப்புரம்: செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து  விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    பெண் கொலை
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் கடந்த 23.7.2016 அன்று ஒரு பெண், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து செஞ்சிக்கோட்டையின் நினைவு சின்ன உதவியாளரான ராஜேந்திரன் என்பவர், செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண், கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரிஹானாபர்வீன் (வயது 27) என்பதும், இவரும் புதுச்சேரி ஜெயகணேஷ் நகர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி (34) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரிஹானாபர்வீனை விஜி, செஞ்சி மலைக்கோட்டை பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெரிய கருங்கல்லால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.  இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட விஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட விஜி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

    மேலும் காண

    Source link

  • TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 3 நாட்களுக்கு மழை இருக்கு
    TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி..  3 நாட்களுக்கு மழை இருக்கு


    <p>தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
    <p>அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>வரும் 3 ஆம் தேதி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் &nbsp;ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp;ஏனைய பகுதிகளில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
    <p>அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை,&nbsp; தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில &nbsp;பகுதிகளில் லேசான மழை &nbsp;பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
    <h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): &nbsp;</h2>
    <p>தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா &nbsp;1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar
    Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar


    Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 
    பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்:
    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார்.
    இதனால், பயணத்திற்கான கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறியுள்ளார். அந்த பெண், சரியான தொகையை தராமல் 500 ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 10 ரூபாய் பயணச்சீட்டுக்கு ரூ.500 கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 
    நடத்துனரும் தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், அந்த பெண் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நடத்துனர் இருக்கையில் அமருமாறும் கூறியதாக தெரிகிறது. அப்போது, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தன்னிலை மறந்த அந்த பெண் நடத்துரை சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டத் துவங்கியுள்ளார்.
    மேலும், அவரை தன் கால்களால் எட்டி உதைத்தும், ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால், பேருந்தில் பெரும் பரபரப்பான சூழல்  நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
    வீடியோ வைரல்:
    அந்த வீடியோவில், பேருந்தில் இருந்த பெண் ஒருவர் நடத்துனரிடம் பயணச்சீட்டுக்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சில நிமிடங்களாக நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். அப்போது, அங்கு மற்றொரு பெண் நடத்துனர் வந்திருக்கிறார். அங்கு, ரகளையில் ஈடுபட்ட பெண்ணை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

    A Woman assaults #TSRTC bus conductors, allegedly the #DrunkWoman created #nuisance in the bus and uses #abusive words, kicks against TSRTC bus conductors, belongs to Hayatnagar Depot -1, video goes viralThe @TSRTCHQ official lodged a complaint against her.#Hyderabad #drunk pic.twitter.com/np0zVvYwnN
    — Surya Reddy (@jsuryareddy) January 31, 2024

    இருப்பினும், அந்த பெண் தொடர்ந்து நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த பெண், நடத்துனரை காலால் எட்டி உதைத்து, அவர் மீது எச்சிலை துப்பியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பேருந்தில் இருந்து இறங்கி  செல்வது போன்று வீடியோவில் உள்ளது.
    இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை  அடுத்து, அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் காண

    Source link

  • AIADMK: அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 50 கோடி லஞ்சம்.. வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..
    AIADMK: அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 50 கோடி லஞ்சம்.. வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..


    <p>அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் நாயுடு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் போது லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2017 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரியிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை வாங்கி பல அடுக்குமாடி கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக 50 கோடி ரூபாய் அளவில் எம்பி முதல் அரசு அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுத்தது தொடர்பாக தெரிவித்துள்ளார்.</p>
    <p>இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை புலனாய்வு உதவி இயக்குனர்&nbsp; மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, லேண்ட்மார்க் ஹவுசிங் சென்னை ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வருமான வரி ஆய்வின் போது வருமானவரித் துறை துணை இயக்குனர் சங்கர பாண்டியிடம் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அளித்த வாக்கு மூலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் 50 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>14.16 ஏக்கர் நிலத்தை பழைய வீடுகளோடு வாங்கியதாகவும் அதில் பல அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு சிஎம்டிஏ அனுமதி பெறுவது பிரச்சினையாக இருப்பது தொடர்பாக கணக்கில் வராத செலவு மூலமாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ரொக்கமாக 50 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் தெரிய வந்தது.</p>
    <p>அந்த அடிப்படையில் அரசியல் பிரதிநிதிகள் ஏழு பேருக்கு இரண்டு கோடி 95 லட்ச ரூபாய் பணமும், அரசு ஊழியர்கள் சிஎம்டிஏ, கழிவு நீர் மட்டும் அடிகால் வாரியம் கூட்டுறவு சங்கம் மின்சாரம் பதிவுத்துறை, சாலை வேலைகள் தொடர்பான அதிகாரிகள், விற்பனை வரி, மாநகராட்சி ஆகிய எட்டு அதிகாரிகளுக்கு 15 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு ரெண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும், இதர செலவுகள் என்ற அடிப்படையில் 31 பேருக்கு 31 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 525 ரூபாய் பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை கொடுத்த தகவலில் இருந்து தெரிய வந்தது.</p>
    <p>குறிப்பாக லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் சென்னை பிரைவேட் லிமிடெட் மற்றும் கே எல் பி ப்ராஜெக்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள் உதயக்குமார் கெட்டபாலியா மற்றும் மணிஷ் பரமர் ஆகிய மூன்று பேரும் 490 கோடி ரூபாய் மதிப்பில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டுமான பணிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் 370 கோடி ரூபாய் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டு 120 கோடி ரூபாய் பின்னி நிறுவனத்திற்கு ரொக்கமாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p>
    <p>இதில் லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் மற்ற இரண்டு இயக்குனர்களிடம் இந்த கட்டுமானத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து தருவதாகவும் அதற்கு 50 கோடி ரூபாய் பணத்தை கே.எல்.பி ப்ராஜெக்ட் நிறுவன இயக்குனர்கள் கெட்டபாலியா மற்றும் மணிஷ் பரமர் ஆகியோரிடம் இருந்து ரொக்கமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது.</p>
    <p>இதனை அடுத்து லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கே எல் பி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் உதயகுமார் கெட்டபாலியா மற்றும் மனிஷ் பரமர் ஆகியோர் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை வாங்கி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் விவாகரத்தில் 50 கோடி ரூபாய் அளவிற்கு எம்பி முதல் அரசு அதிகாரிகள் பலருக்கும் லஞ்சம் கொடுத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
    <p>இதனை தொடர்ந்து, பெரம்பூர் பட்டாளம்&nbsp; ஸ்டாராஹன்ஸ்&nbsp; சாலையில் உள்ள கட்டுமானம் மற்றும் தொடர்பான கே எல் பி நிறுவன அலுவலகம், தியாகரய நகரில் உள்ள லேண்ட்மார்க் ப்ரோஜக்ட் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் இடங்கள் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
    <p>இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனையில் கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்களை வாங்கி மேற்கொண்ட பண பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை கேட்டு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
    <p>லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் வருமானவரித்துறை இடம் தெரிவித்த தகவல் அடிப்படையில் 50 கோடி ரூபாய் பணம் யார் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பது குறித்த விவரத்தை அடிப்படையாக வைத்து அதற்கான பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
    <p>இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த இரண்டு கட்டுமான நிறுவனங்கள் 50 கோடி ரூபாய் பணம் கொடுத்த நபர்கள் குறித்த ஆதாரங்களை திரட்டி அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட எம்பி முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கிடைக்க பெறும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள்&nbsp; வழக்கில் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்</p>

    Source link

  • Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN
    Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN


    வேடசந்தூர் அருகே மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து மாலை அணிந்து, விரதமிருந்து கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்திற்கு யாத்திரை செல்லும் தொண்டர்கள்.
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர்.
    Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை

    எரியோடு தே.மு.தி.க பேரூர் கழக செயலாளர் சங்கர் குரு சாமியாக முன்னின்று தொண்டர்களுக்கு மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் விரதம் இருந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பூ கலசங்களுடன் சென்னை கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு யாத்திரை சென்று, வழிபாடு நடத்த உள்ளனர்.
    Budget 2024 Expectations: நாடே காத்திருக்கும் பட்ஜெட் 2024! என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு!

    இது குறித்து தொண்டர்கள் கூறிய போது, ”மறைந்த கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து அவருக்காக மாலை அணிந்து 5 நாட்கள் விரதம் இருக்க உள்ளோம். கேப்டனை வழிபாடு செய்ய “தர்ம தேவனே போற்றி! போற்றி!” என்ற தாரக மந்திரத்தை உருவாக்கியுள்ளோம்.
    மேலும் 10 பேர் மாலை அணிய உள்ளனர். அதன் பின்னர் வருகின்ற சனிக்கிழமையன்று பூ கலசங்களுடன் அனைவரும் சென்னைக்கு யாத்திரை சென்று, ஞாயிற்றுக்கிழமை அன்று கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளோம்” என்றார்.
    Budget 2024 Expectations: இடைக்கால பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? பொருளாதார நிபுணர் பேட்டி

    மேலும் வருகின்ற காலங்களில் ஆண்டுதோறும் இதே போன்று மாலை அணிந்து விரதம் இருந்து நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் தேமுதிக எரியோடு பேரூர் தே.மு.தி.க துணை செயலாளர் ராசு, நாகையகோட்டை ஊராட்சி செயலாளர் சவட முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தமிழகத்திலேயே முதல் முறையாக அரசியல்வாதி ஒருவருக்கு கொண்டர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, பூ கலசம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் காண

    Source link

  • Is PMK going to form an alliance with AIADMK in 2024 parliamentary elections? Passing resolution in general council meeting
    Is PMK going to form an alliance with AIADMK in 2024 parliamentary elections? Passing resolution in general council meeting


    2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பாமக குறிப்பால் உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை பாமக சந்திக்கப் போகிறதா இல்லை பாமக தலைமையில் புதிய கூட்டணியை அந்த கட்சி உருவாக்க போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக பொதுக்குழுவில் தீர்மானம்https://t.co/wupaoCz9iu | #Ramadoss #AnbumaniRamadoss #PMK #Election2024 pic.twitter.com/Aya2WqTSWA
    — ABP Nadu (@abpnadu) February 1, 2024

    பாஜகவுடன் கூட்டணி இல்லையா ? தீர்மானம் சொல்வது என்ன ?
    2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பாமக குறிப்பால் உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை பாமக சந்திக்கப் போகிறதா இல்லை பாமக தலைமையில் புதிய கூட்டணியை அந்த கட்சி உருவாக்க போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    24 தீர்மானங்களோடு சேர்த்து அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றிய பாமக
    பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டை முன்னிறுத்தி 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அரசியல் தீர்மானம் ஒன்று தனியாக இயற்றப்பட்டுள்ளது. அதில், கூட்டணி குறித்து முடிவுகளை எடுக்க பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு தீர்மானத்தில்,
    நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது இது தற்காலிக நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் அரைநூற்றாண்டு ஆகப்போகும் நிலையில் இன்றுவரை அந்த 5 பொருட்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை.தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும். இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போர் முழக்கமிட்டு அதை சாத்தியமாக்கினார். அதற்கு முதன்மை காரணமாக இருந்தது பா.ம.க.வுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான்.மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியலின மாணவர்கள், பழங்குடியின மாணவர்களுக்கு சமூக நீதி ஒதுக்கப்பட்டே வந்தது. மத்திய சுகாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இருந்த போதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி,  இந்திய சமூக அநீதியைக் களைந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார்.ஒட்டுமொத்த உலகமே போற்றக்கூடிய 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின்  மிகப் பெரிய சுகாரத்திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகளை நாடு முழுவதும் திறக்கும் திட்டம், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டம், தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றை மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் கொண்டுவருவதற்கு காரணமும் மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்த வலிமைதான்.பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இருந்த போது தான் தமிழ்நாட்டிற்கு மிக அதிக தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. நீண்டகால கனவான சேலம் கோட்டமும் சாத்தியமானது. இப்படியாக தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியால் கிடைத்த நன்மைகளின் பட்டியல் மிக நீண்டது. மக்களவையில் பா.ம.க. வலிமையாக இருந்ததால் தான் இது சாத்தியமானது.மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது

    Source link

  • சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் திடீர் மரணம் -மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
    சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் திடீர் மரணம்  -மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்


    <p style="text-align: justify;">சேலம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவரது இல்லம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், சுதர்சன் பாபு என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சுதர்சன் பாபுவிற்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியுடன் சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் இருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/345a4bcc78097d2ecb30def9987066f41706730954610113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">இந்த நிலையில் சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். உடல் மோசமானதால் உடனடியாக சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினர். அப்போது உடனடியாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் வருகை தந்து பேசினார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">இதனிடைய சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சுதாவின் உறவினர்கள், சுதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் மேயரின் மருமகள் சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கவில்லை, பட்டினி போட்டு உணவு வழங்காமல் இருந்ததால் இறந்ததாக தெரிவித்தனர். எனவே முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை அழைத்து வருவதற்கு அரசு 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாகவும், மாநகராட்சி மேயரின் மருமகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு என்ன நிலை என கேள்வி எழுப்பினர். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மனைவி, மகன், மகள் ஆகியோர் தான் கொடுமை செய்ததாக சுதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். எனவே முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/21abaf39bf9d745a10e674edb3c1d7151706730964196113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் ஆகிய எனக்கு சுதர்சன் பாபு என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் நான் இருந்தபோது எனது மருமகள் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. உடனடியாக நான் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தேன் அங்கிருந்த மருத்துவர்கள் எனது மருமகள் இறந்ததை உறுதி செய்து என்னிடம் கூறினார்கள். பின்னர் சடலத்தை இல்லத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து வந்தேன் அப்போது எனக்கு ஒரு செய்தி வந்ததது. அதில் எனது மருமகளுடைய தம்பி மற்றும் அவரது உறவினர்கள் என்னை பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தவறான தகவலை பேட்டி தந்ததாக தெரியவந்தது. ஆனால் நான் எனது மகன் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் தான் அவர்களை பார்த்து கொண்டேன். மேற்படி எனது மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது சேலம் தனியார் மருத்துவமனையில் (எஸ்.கே.எஸ்) அவ்வபோது சிசிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அந்த பெண்ணுக்கு வெற்றிலை பாக்கு (தலை புகையிலை) பழக்கம் இருந்து வந்ததது. இதனால் உடல் நலம் கெட்டு நலிவடைந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இவ்வாறு இருந்து வந்த நிலையில், நானும் பொதுவாழ்வில் இருப்பதால் தனியாகவே இருந்து வந்தேன். எனது மருமகளின் குடும்பத்தினர் எனது பொது வாழ்விற்கும் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகிறார்கள் இதை பொருத்த வரை எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்புக்கு நானும் எனது குடும்பமும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">சேலம் அரசு மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சுதா உயிரிழந்த நிலையிலே சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மேலும் அவர்கள் கொடுத்த மருத்துவ அறிக்கையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • அடுத்த தலைமுறைக்கு விவசாயம் பற்றி தெரியவில்லை அரிசி சிப்பம் விலை உயர்வு அபாயம்..
    அடுத்த தலைமுறைக்கு விவசாயம் பற்றி தெரியவில்லை அரிசி சிப்பம் விலை உயர்வு அபாயம்..


    ஆரணியில் ஒருநாளைக்கு  5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசி பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றது. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் பொன்னி, பிபிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆரணியிலிருந்து தினந்தோறும் ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் விளைச்சல் குறைவால் அரிசி உற்பத்தி குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் நெல் சாகுபடி குறைந்து வருவதால் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

    ஒரு கிலோ அரிசி  ரூ.15 வரை விலை உயர்வு
    இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு மட்டும் தமிழகத்திலிருந்து அரிசி 20 சதவீதமும் ஆரணியிலிருந்து 5 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது நெல் விளைச்சல் மிக குறைவாக இருப்பதற்காகவே அரிசி விலைகள் தற்போது ஒரு கிலோவிற்கு  10 ரூபாய் முதல் 15 வரையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் கூடுதலாக அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் தான் தற்போது நாம் இருந்து வருவதாகவும் தெரிவிகின்றனர். அரிசி விலை குறைய வேண்டுமானால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிகின்றனர். தமிழகத்தில் தஞ்சாவூர் அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் நெல் சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் விலை உயர்ந்த நெல்களான பொன்னி நெல் சாகுபடியில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருபவர்களின் வாரிசுகள் தற்போது ஐ.டி பீல்டிலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால்
     

    இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை 
    அடுத்த தலைமுறை இளைஞர்கள்  விவசாயம் என்றால் என்வென்றே தெரியாமல் காணாமல் போகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உணவிற்கு மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கையேந்தும் நிலைமை உருவாகும் நிலையில் உள்ளோம்.  விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசு முழு மானியம் வழங்கி விவசயாத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயம் பயன்படுத்த கூடிய  மூலபொருட்களான பொட்டாசியம், யூரியா, உரம்  உள்ளிட்ட பொருட்கள் விலையில் தொடர்ந்து உயர்வு ஏற்பட்டாலும்  நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால்  அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நேரிடையாக பாதிக்கப்படும் கூடும் என்பதால் அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அரிசியின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    மேலும் காண

    Source link

  • Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு
    Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு


    <p>100 ஆண்டுகால அயோத்தி பிரச்னை, உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.</p>
    <h2><strong>முலாயம் சிங்கால் பூட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி:</strong></h2>
    <p>அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.&nbsp; உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது.&nbsp;</p>
    <p>உத்தர பிரதேச முதலமைச்சராக சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் பதவி வகித்து வந்தபோது, சர்ச்சைக்குரிய பகுதியை மூட உத்தரவிட்டார்.</p>
    <p>மசூதியின் அடித்தளத்தில் 4 பாதாள அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் அர்ச்சகரின் வம்சாவளியினர் வசித்து வந்தனர். தற்போது கூட, அந்த அறை, அர்ச்சகர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அர்ச்சகர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என அர்ச்சகரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.</p>
    <p>அதுமட்டும் இன்றி, ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.</p>
    <h2><strong>ஞானவாபி மசூதியில் நிலவும் அசாதாரண சூழல்:</strong></h2>
    <p>இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது.</p>
    <p>கடந்த வாரம், ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. முன்பு இருந்த இந்து கோயிலின் ஒரு பகுதி தற்போது மசூதியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்து கோயிலின் தூண்களில் சிறிய மாற்றங்கள் செய்து அதன்மீது கட்டுமானங்கள் எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.</p>
    <p>இதனையடுத்து, ஞானவாபி மசூதியின் மூடப்பட்ட அடித்தள பகுதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. மசூதியில் தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை, ஏழு நாட்களில் முடிக்க வேண்டும் என்றும் பூஜைகளை விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p>
    <p>நீதிமன்ற உத்தரவு வெளியானதில் இருந்தே, காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மசூதியில் இந்துக்கள் குவிய தொடங்கினர். மசூதி செல்லும் பாதையை குறிக்கும் வழிகாட்டி பலகையில் மசூதி என்ற வார்த்தையை அகற்றிவிட்டு ‘கோயில்’ என ராஷ்டிய இந்து தளம் அமைப்பினர் எழுதியது பரபரப்பை கிளப்பியது. அசம்பாவிதத்தை தவிர்க்கும் நோக்கில் மசூதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!
    Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!


    <p>மறைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த &lsquo;புயலில் ஒரு தோணி&rsquo; படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p>
    <h2><strong>பவதாரிணி</strong></h2>
    <p>பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
    <p>ஒரு பாடகராக தனது குழந்தை போன்ற குரலால் அனைவரையும் வசீகரித்தவர் பவதாரிணி. பவதாரிணி பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது வெகுஜன பரப்பில் பரவலாக அறியப்படாத ஒரு தகவல். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் அமிர்தம், இலக்கணம் உள்ளிட்ட பவதாரிணி இசையமைத்தப் படங்கள் வெளியாகி இருக்கின்றன.</p>
    <p>மேலும் போரிடப் பழகு, கள்வர்கள், மாயநதி உள்ளிட்ட அவர் இசையமைத்த பாடல்கள் வெளியாகவில்லை. பவதாரிணி இறப்பதற்கு முன் கடைசியாக இசையமைத்த படம் புயலில் ஒரு தோணி. இந்தப் படத்தின் இயக்குநர் ஈசன் பவதாரிணியின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம்</strong></h2>
    <p>புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் புயலில் ஒரு தோணி படத்தில் நடித்துள்ளார்கள். பவதாரிணி குறித்து படத்தின் இயக்குநர் ஈசன் இப்படி கூறியுள்ளார்.</p>
    <p>&rdquo;பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையைத் தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். நான் முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன்.</p>
    <p>அவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்குக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை &nbsp;ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர்.</p>
    <p>நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார். மேலும், பின்னணி இசையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைத்துள்ளார். படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்&rdquo; என்று பேசியுள்ளார்.</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க : <a title="Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை’" href="https://tamil.abplive.com/entertainment/vetrimaaran-viduthalai-part-1-part-2-received-standing-ovation-rotterdam-film-festival-screening-164599" target="_self" rel="dofollow">Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை'</a></strong></p>
    <p><strong><a title="Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!" href="https://tamil.abplive.com/entertainment/pa-ranjith-fiercy-speech-about-tamil-film-censor-board-issues-at-blue-star-success-meet-164942" target="_self" rel="dofollow">Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!</a></strong></p>

    Source link

  • Khelo India Youth Games 2023: Chief Minister M. K. Stalin is proud that Tamil Nadu is the sports capital of India | Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு
    Khelo India Youth Games 2023: Chief Minister M. K. Stalin is proud that Tamil Nadu is the sports capital of India | Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு


    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட் டோர்) விளையாட்டு போட்டி கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கைப்பந்து, பேட்மிண்டன், சைக்கிளிங், தடகளம், கபடி, வில்வித்தை, நீச்சல், யோகாசனம், கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சென்னையை தவிர்த்து இந்த போட்டியானது கோவை, மதுரை, திருச்சியிலும் நடத்தப்பட்டது.
    முதல் நாளில் இருந்தே கேலோ இந்தியாவில் பதக்க வேட்டை நடத்திய தமிழ்நாடு அணி, கடைசி நாளான நேற்றும் முத்திரை பதித்தது.
    தமிழ்நாடு 98 பதக்கம்:
    13 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியானது நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. நடப்பு சாம்பியனான மஹாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 158 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்க வைத்தது. இதன்மூலம், தொடர்ந்து 4வது முறையாக மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்தது. 
    போட்டியை நடத்திய தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொதக்கம் 98 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழ்நாடு அணியின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு புனேயில் நடந்த 15 போட்டியில் 27 தங்கம், 36 வெள்ளி, 25 வெண்கலம் என 88 பதக்கத்துடன் 5-வது இடத்தை பெற்றதே தமிழகத்தின் சிறந்த பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு பதக்க பட்டியல் விவரம்: 

    தடகளம் – 11 தங்கம் உள்பட 18 பதக்கம்
    சைக்கிளிங் -5 தங்கம் உள்பட 12 பதக்கம்
    நீச்சல் – 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம்
    டென்னிஸ் – 4 தங்கம், 2 வெண்கலம்
    ஸ்குவாஷ் -3 தங்கம்
    யோகாசனம் – 3 தங்கம் 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்: 
    இந்தநிலையில், இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமீபத்திய KheloI ndia இளைஞர் விளையாட்டுகள் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் #விளையாட்டுத் தலைநகராகவும், உலகளாவிய விளையாட்டு மையமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.

    With numerous international sports events and the recent #KheloIndia Youth Games, Tamil Nadu is solidifying its position as the #SportsCapital of India and a global sports hub.Making history at the #KheloIndiaYouthGames2023, Tamil Nadu emerged as the Runners Up with an… pic.twitter.com/wQuVNaF7IB
    — M.K.Stalin (@mkstalin) February 1, 2024

    கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 புதிய வரலாறு படைத்தது தமிழ்நாடு. 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. இது எங்கள் U-18 சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் ஆகும். 
    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை எந்தவொரு குறைபாடும் இன்றி செயல்படுத்தியதற்காக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்!” என பதிவிட்டு இருந்தார். 

    மேலும் காண

    Source link

  • Union Finance Minister Nirmala Sitharaman presenting the budget for the 6th time has attractedattention by wearing a Ram colored saree
    Union Finance Minister Nirmala Sitharaman presenting the budget for the 6th time has attractedattention by wearing a Ram colored saree


    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.
    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார். 

    #WATCH | Finance Minister Nirmala Sitharaman along with her team before the presentation of the country’s interim Budget pic.twitter.com/hohpB7qtZi
    — ANI (@ANI) February 1, 2024

    இந்நிலையில் அவர் ராமர் நிற சேலையை அணிந்து வந்துள்ளார். பொதுவாக நீல நிறத்தை அல்லது மயில் கழுத்தில் இருக்கும் நிறத்தை ராமர் நிறம் என சொல்வார்கள். ராமருக்கே உரிய நிறமாகவும் இது சொல்லப்படும். அண்மையில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. நாடே உற்று நோக்கிய இந்த நிகழ்வு ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. ராமர் கோயில் கட்டுமானம் மூலம் அடுத்த ஆட்சியும் பாஜக கைப்பற்றும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படி பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு ராமர் நிற சேலையை அணிந்து வந்துள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், ராமர் நிற சேலையை அணிந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அணிந்துள்ள புடவை முழுவதும் தங்க நிறத்தில் இலைகள் பதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய டிசைன்கள் எதுவும் இல்லாமல் சிம்பிளாக புடவை அணிவது வழக்கம். இந்நிலையில் இன்று அவர் ராமர் நிற புடவையில் embroidery டிசைன் வைத்து புடவை அணிந்துள்ளார்.

    Union Minister of Finance and Corporate Affairs Smt Nirmala Sitharaman along with Ministers of State Dr Bhagwat Kishanrao Karad and Shri Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the… pic.twitter.com/miwSv8r4dE
    — President of India (@rashtrapatibhvn) February 1, 2024

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். குடியரசு தலைவரும் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.  

    மேலும் காண

    Source link

  • Tamil Thalaivas : போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்! ப்ளே ஆப்-க்கு சென்றது ஜெய்ப்பூர்
    Tamil Thalaivas : போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்! ப்ளே ஆப்-க்கு சென்றது ஜெய்ப்பூர்


    <p>போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்! ப்ளே ஆப்-க்கு சென்றது ஜெய்ப்பூர்</p>

    Source link

  • VetriMaaran Viduthalai Part 1 Part 2 Received Standing Ovation Rotterdam Film Festival Screening
    VetriMaaran Viduthalai Part 1 Part 2 Received Standing Ovation Rotterdam Film Festival Screening


    Viduthalai Part 1 & 2:  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்களுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது.
     
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 படம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்தது. எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை பாகம்-1ல் விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி என பலர் நடித்துள்ளனர். நடுத்தர மக்களின் மீது நடத்தப்பட்ட அதிகார அடக்குமுறையை கூறிய விடுதலை பாகம் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், வசூலிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.
    மேலும் உள்ளூர் எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி உலக அளவில் விடுதலை பாகம் -1 படத்துக்கு வரவேற்புகள் இருந்தன. விடுதலை பாகம் ஒன்றைத் தொடர்ந்து, விடுதலை பாகம் -2 படப்பிடிப்பில் வெற்றிமாறன் பிசியாக இருந்தார். 
     
    இந்த நிலையில் விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்கள் சர்வதேச அளவில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முன்னதாகத் திரையிடப்பட்டன. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை பாகம்-1, விடுதலை பாகம்-2 திரையிடப்படும் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னதாக அறிவித்திருந்தார். 
     
    விழாவில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிலையில், இவ்விழாவில் வெற்றிமாறன் படைப்பின் முழு கதையை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
    இந்நிலையில் விடுதலை பாகம் – 1 மற்றும் பாகம் – 2 படங்களுக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.  சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒரு சிறந்த படைப்பை பாராட்டுவதற்கு தொடர் கைத்தட்டல்கள் வழங்கி அங்கிருக்கும் சினிமா ஆர்வலர்கள் கௌரவிப்பது வழக்கம். இந்நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    #Viduthalai Part 1 & 2 The film receives a thunderous standing ovation at @IFFR! Powerful 5-minute applause resonates with the impactful storytelling and stellar performances at #RotterdamFilmFestival An @ilaiyaraaja Musical#VetriMaaran @VijaySethuOffl @sooriofficial… pic.twitter.com/ov1w4TmtQd
    — Red Giant Movies (@RedGiantMovies_) February 1, 2024

    முன்னதாக சர்வதேச அளவில் விடுதலை படம் திரையிடுவது குறித்து அதன் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசும்போது, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் விடுதலை படம் மூலம் நமது இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும் மரியாதையும் அளிக்கிறது.
    மிகவும் புகழ்பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு. இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சிய அடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த வரிசையில் விடுதலை படம் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுத்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார். 
     

     

     

    மேலும் காண

    Source link

  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 255 கன அடியில் இருந்து 197 கன அடியாக குறைவு
    மேட்டூர் அணையின் நீர் வரத்து 255 கன அடியில் இருந்து 197 கன அடியாக குறைவு


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 255 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 197 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/b6a7555ca6dd48e2956addc6a692549d1706761757455113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 70.55 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.17 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/31084ab7777226d1d2b739875cd015f71706761790046113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Latest Gold Silver Rate Today february 1 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai
    Latest Gold Silver Rate Today february 1 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai


    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,880  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,800 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,880 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,880 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,880 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,880 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,342 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,332 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,805 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,342 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • GST Collerction January: பட்ஜெட் தாக்கமா?
    GST Collerction January: பட்ஜெட் தாக்கமா?


    GST Collerction January 2024: ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலான ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாயை விட 10 சதவிகிதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் தான், ஜிஎஸ்டி வசூல் வருவாயில் அதிகபட்ச மாதாந்திர வருவாயாகும். மேலும் இந்த நிதியாண்டில் ரூ. 1.70 லட்சம் கோடி அல்லது அதற்கு மேல் வசூலாவது இது மூன்றாவது முறையாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து மத்திய அரசுக்கான் ஜிஎஸ்டி ஆக ரூ. 43,552 கோடியும், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி ஆக ரூ. 37,257 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    👉 ₹1,72,129 crore gross #GST revenue collected during January 2024; records 10.4% Year-on-Year growth👉 At ₹1,72,129 crore, #GST collections are 2nd highest ever; crosses ₹1.70 lakh crore mark for the third time in FY 2023-24Read more 👉 https://t.co/pG5u9hOX75 pic.twitter.com/wgdjFjgO2P
    — CBIC (@cbic_india) January 31, 2024

    தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வரி வருவாய்..!
    ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரையிலான கால கட்டத்திற்கான ஜிஎஸ்டி வர் வருவாயாக, 16 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய்  வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை காட்டிலும்  11.6 சதவிகிதம் இதுவாகும். முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் (ஏப்ரல் 2022-ஜனவரி 2023) ஜிஎஸ்டி வரியாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது குறிப்பிடத்தகக்து.. 

    மேலும் காண

    Source link

  • Pa Ranjith speech : ”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்
    Pa Ranjith speech : ”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்


    <p>&rdquo;நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்&rdquo;உடைத்து பேசிய பா.ரஞ்சித்</p>

    Source link

  • காலையிலேயே ஷாக்..! சிலிண்டர் விலை உயர்வு, தற்போதையை நிலவரம் என்ன?
    காலையிலேயே ஷாக்..! சிலிண்டர் விலை உயர்வு, தற்போதையை நிலவரம் என்ன?


    Gas Cylinder price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதம் இந்திய சந்தையில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிரது. அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த  கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது.  அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
    பலிக்காத எதிர்பார்ப்பு:
    கடந்த ஜனவரி 1ம் தேதி 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை  ரூபாய் 1,924.50 ஆக குறைந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது வணிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக அமைந்தது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர் எதிராக வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    விலை மாற்றம் ஏன்?
    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க முடியும். ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த 620 நாட்களுக்கும் மேலாக எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், சமையலுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம். இதன் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 12.50 உயர்த்தப்பட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu Legislative Assembly likely to start on February 12, Tamil Nadu Budget tabled on February 19
    Tamil Nadu Legislative Assembly likely to start on February 12, Tamil Nadu Budget tabled on February 19


    2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு விரைவில் வெளியிடவுள்ளார்.
    7ஆம் தேதி தமிழகம் திரும்பும் முதல்வர்
    ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அதற்கடுத்த வாரமான திங்கள்கிழமையன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்த நிலையில், 12ஆம் தேதி தொடங்கவுள்ள கூட்டத் தொடருக்கான ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதவுள்ளது.
    12ஆம் தேதி கூட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தேவை
    திட்டமிட்டபடி 12ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கினால், தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் வாசித்து கூட்டத் தொடரை தொடங்குவார். அதற்கான, தமிழ் மொழிப்பெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு, அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுறும். கடந்த 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகள் சேர்த்தும் விடுத்தும் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தியது சர்ச்சையானது. அந்த நிகழ்வில் இருந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அரசு அனுப்பிய பல்வேறு கோப்புகளை ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலால் சமீபத்தில் முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நிகழ்ந்தது.
    என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ரவி?
    இந்நிலையில், இந்த முறை தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க போகிறாரா ? இல்லை கடந்த ஆண்டு போல உரையில் இல்லாத சொற்களை பயன்படுத்தி பேசப்போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த தினத்தன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் புறக்கணித்தன.
    தேநீர் விருந்தில் பங்கேற்ற நிதி அமைச்சர்
    இருப்பினும், தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளதால் ஆளுநர் இடையே பெரிய அளாவிலான மோதல் போக்கை ஏற்படுத்திக்கொள்ளாமல், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் முயற்சியாக இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
    12ஆம் தேதி கூட்டத் தொடர் தொடங்கினால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதில் பேரவை உறுப்பினர்கள் பேசுவர். இறுதியாக, ஆளுநர் உரைக்கு முதல்வர் பதிலளித்து பேசுவார். அதோடு, கவர்னர் உரை மீதான விவாதம் நிறைவடையும்.
    தமிழக பட்ஜெட் பிப்.19ல் ?
    நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், பிப்ரவரி 19ஆம் தேதியே இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாளான 20ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட பேரவை நிகழ்வுகள் இந்த மாதம் 24 அல்லது 25ஆம் தேதி வரை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
     

    மேலும் காண

    Source link