பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்


<p style="text-align: justify;">பிரதமர் மோடி ராமநாதபுரம் வருவதையொட்டி இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்கள் இன்று (ஜனவரி 20) விடுதலை செய்யப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>
<p style="text-align: justify;">தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கடிதம் எழுதினார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் தான், நேற்று (ஜனவரி 19) சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று மோடி சாமி தரிசனம் செய்தார். மதியம் 12.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைகிறார்.</p>
<p style="text-align: justify;">மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், 40 மீனவர்கள் இன்றே தமிழகம் திரும்புவார்கள் என்று மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல, பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.</p>

Source link