TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்..


<p>வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும்,&nbsp;இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.</p>
<p>இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை&nbsp; பெய்யக்கூடும்.&nbsp;&nbsp; ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>நாளை தமிழகம், புதுவை&nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>பின் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை&nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
<p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான&nbsp;&nbsp; வானிலை முன்னறிவிப்பு:</p>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.&nbsp; நகரின்&nbsp; ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp; அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்&nbsp; இருக்கக்கூடும்.</p>
<p>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</p>
<p>13.01.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்&nbsp; சூறாவளிக்காற்று&nbsp; மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65&nbsp; கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&nbsp;மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.</p>

Source link