Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு…எந்த தேதி வரை தெரியுமா?


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியில் நீதிமன்ற காவலை 21-வது முறையாக  நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜூன் 14-ஆம் தேதி கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் காண

Source link