Lok Sabha Election 2024: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர்,டிஜிபியுடன் நாளை மறுநாள் பிற்பகலில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதோடு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும், நாளை மறுநாள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த பயணத்தின் போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமின்றி, மற்ற 3 தேர்தல் ஆணையர்களும் சென்னை வர உள்ளனர்.
Lok Sabha Election 2024: வேகமெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள்
