Anna Serial: கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்.. திகைத்த மீனாட்சி.. அண்ணா சீரியல் அப்டேட்!


<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p>
<p>அதாவது சடங்கு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து கனியை கூட்டி வந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க செல்ல, வைகுண்டத்தின் காலில் விழுந்து அவள் ஆசீர்வாதம் வாங்க செல்கிறாள். அப்போது வைகுண்டம் &ldquo;இந்த வீட்டோட தெய்வம் சண்முகம் தான், அவன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு&rdquo; என சொல்ல கனி அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.&nbsp;</p>
<p>கனி நம்மை விட்டு பிரிஞ்சிடப் போறா என்ற வேதனையுடன் சண்முகம் இருக்க, அதைப் பார்த்து வைகுண்டம் பரணி பீல் பண்ணுகின்றனர். &ldquo;அண்ணனை விட்டு போயிட மாட்டல?&rdquo; என்று சண்முகம் மனசுடைந்து கேட்க, கனி &ldquo;உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன், உன் கூடவே இருக்கணும் என்பதற்காக கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன்&rdquo; என்று சொல்ல, சண்முகம் கனியை கட்டியணைத்து கண் கலங்குகிறான்.&nbsp;</p>
<p>வீட்டுக்கு வந்த மீனாட்சி சண்முகம் வீட்டில் கதவைத் தட்ட கனி கதவைத் திறக்கிறாள். மகளை பார்க்கும் மீனாட்சி திகைத்து நிற்க, கனி &ldquo;யார் நீங்க? என்ன வேண்டும்?&rdquo; என்று கேட்க, தண்ணி கேட்க வந்ததாக சொல்ல, கனியும் தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறாள். வீட்டில் ஏற்பாடுகள் தடபடலாக இருக்க, மீனாட்சி என்ன விஷயம் என்று கேட்க, கனி பெரிய மனுஷியாகி விட்டு விஷயத்தை சொல்லி &ldquo;பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ&rdquo; என சொல்ல, மீனாட்சி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் கனி.&nbsp;</p>
<p>அதன் பிறகு பாக்கியத்தைப் பார்த்து &ldquo;இது உங்க பொண்ணா?&rdquo; என்று மீனாட்சி கேட்க, &ldquo;இல்ல என் அண்ணன் பொண்ணு&rdquo; என பாக்கியம் பதில் சொல்கிறாள். &ldquo;இவங்க அம்மா இல்லையா&rdquo; என்று கேட்க, அவங்க அம்மா இப்போ வீட்ல இல்ல என்று சொன்னதும் கனி தான் தன்னுடைய மகள் என்பதை உறுதி செய்து கொள்கிறாள்.&nbsp;</p>
<p>அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வந்த மீனாட்சி &ldquo;அது என் பொண்ணு தான். போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்&rdquo; என்று சொல்ல, சௌந்தரபாண்டி &ldquo;அதெல்லாம் வேண்டாம், சண்முகம் இல்லாத நேரமா பார்த்து சொல்றேன், வீடு புகுந்து கனியை தூக்கிட்டு போயிடுங்க&rdquo; என்று ஐடியா கொடுக்க, அவர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். சௌந்தரபாண்டி மைண்ட் வாய்ஸில் &ldquo;பிரசிடெண்ட் பதவியில் மட்டுமல்லாமல் உனக்கு தர்ம கத்தா ஆகணுமா? அதுக்கு வைக்கிறேன் ஆப்பு&rdquo; என பேசிக்கொள்கிறார்.&nbsp;</p>
<p>பிறகு சௌந்தரபாண்டி கொடுத்த ஐடியா படி சண்முகம் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ரவுடிகள் நுழைகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link