ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள ஜவுளி நகரில் கட்டடம் இடிந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கட்டப்பட்ட கட்டடத்தின் மாடியில் பூச்சு வேலைகளை செய்தபோது விபத்து நடந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர் நாகேந்திரனை மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த பணியாளர்கள் இருவர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.