Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட் 


<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா.&nbsp; இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும் திருமணம் பேசி பூ வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p>
<p>வள்ளியும் தண்டபாணியும் தனியாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வள்ளி தண்டபாணியிடம் &ldquo;இந்தக் கல்யாணம் நடக்காது, கேசவன் உன் பொண்ணுக்கு தான்&rdquo; என வாக்கு கொடுக்கிறாள்.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து வீரா மாறனை சந்தித்துப் பேச வருகிறாள். அவனை சந்தித்து &ldquo;இப்பொழுது இரண்டு குடும்பமும் ஒண்ணாக போகுது, அதனால பகை எல்லாம் வேண்டாம், நான் மன்னித்து விட்டேன்&rdquo; என்று பேச மாறன் திமிராக &ldquo;நீ என்னை என்ன மன்னிக்கிறது. ஜட்ஜ் ஐயாவே என்ன மன்னிச்சிட்டாரு, அதனாலதான் பெயில் கொடுத்தாரு, கிளம்பு கிளம்பு&rdquo; என சொல்லி அனுப்புகிறான்.&nbsp;</p>
<p>வீரா அங்கிருந்து கிளம்பி வந்ததும் மாறனின் நண்பர்கள் &ldquo;ஏன் அந்த பொண்ணு கிட்ட இப்படி பேசின?&rdquo; என்று கேட்க, &ldquo;சிலர் நல்லவனா இருக்கணும்னு சிலர் கெட்டவங்களா தான் இருக்கணும்&rdquo; என கேசவனை மனதில் நினைத்து சொல்கிறான்.&nbsp;</p>
<p>அதனைத் தொடர்ந்து வீரா ராமச்சந்திரனை சந்தித்து பணம் கொடுக்க வர, அவர் &ldquo;என் சொந்தக்காரங்க சொன்னதுனால இந்த பணத்தை கொண்டு வந்து தறியா?&rdquo; என்று கேட்க, &ldquo;இல்லைங்க சார், எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு, எங்க அக்காவுக்கு சேர்த்து வைத்த பணம்&rdquo; என்று சொல்லி கல்யாணத்திற்காக பணத்தை கொடுக்க ராமச்சந்திரன் &ldquo;வேண்டாம்னு சொன்னாலும் நீ கேட்கப்போவதில்லை, சரி கொடு&rdquo; என்று வாங்கிக் கொள்கிறார்.&nbsp;</p>
<p>இந்த நேரம் பார்த்து ராமச்சந்திரன் கடைக்கு ரைட் வர, அக்கவுண்ட்ஸ் பார்ப்பவர் லீவு என்பதால் வீரா எல்லா கணக்குக்கும் புத்தகங்களையும் எடுத்துக்காட்டி அவர்களிடம் ஒரு வாரம் டைம் கேட்கிறாள். ஆபீஸர்களிடமிருந்து ராமச்சந்திரனை காப்பாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து இராமச்சந்திரன் &ldquo;நீயே கடைக்கு வேலைக்கு வந்துடு&rdquo; என்று கேட்க &ldquo;இல்லைங்க சார், சொந்தக்காரங்களா யோயிட்டதால லேட்டா வந்தா கூட சொந்தக்காரர் கடை அதனால லேட்டா வராங்கன்னு சொல்லுவாங்க, அது செட்டாகாது&rdquo; என சொல்ல கடையில் ப்ரொபஷனலால் நடந்து கொள்ளலாம் எனக் கூறுகிறார்.&nbsp;</p>
<p>ராமச்சந்திரன் &ldquo;ஸ்ரிட்டா கரெக்ட் டைமுக்கு வேலைக்கு வந்துடணும், லீவு எல்லாம் போடக்கூடாது&rdquo; என சொல்கிறார். வீராவும் &ldquo;நீங்களும் சரியா சம்பளத்தை கொடுத்துடணும்&rdquo; என்று சொல்லி சிரிக்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்து வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல ராமச்சந்திரன் கடை எனத் தெரிந்ததும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.&nbsp;</p>
<p>&ldquo;கண்மணி அந்தக் கடைக்கு வேலைக்கு போக போறியா?&rdquo; எனக் கோபப்பட, &ldquo;நீ அந்த வீட்டுக்கு வாழவே போற, நான் வேலைக்கு தான் போறேன், இதில் என்ன இருக்கு?&rdquo; என்று வீரா கேட்க, கண்மணி மனதுக்குள் &ldquo;அந்த வீட்டுக்கு வாழ போல, பழி தீர்க்க போறேன்&rdquo; என சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link