ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவுக்கு திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சர்வதேச அளவிலான தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முகமது அல் அப்பார், பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் பல விவிஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாலிவுட் பிரபலங்கள் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் – ஆலியா பட் , ராணி முகர்ஜி, ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், சோனாலி பிந்த்ரே, நடிகர் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், சூரியகுமார் யாதவ், ஹிர்திக் பாண்டியா மற்றும் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
ஹாலிவுட்டின் பிரபலமான பாடகி ரிஹானாவின் நடன நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முன்பான இந்த நிகழ்ச்சிகளில் நடனமாட அவருக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மேலும் காண