Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? – இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!


<p>லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் , முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவும் &nbsp;கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கிரிக்கெட் விளையாட்டை மையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.</p>
<p>சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் நடிகர் ரஜினிகாந்தை &nbsp;சங்கி என விமர்சனம் செய்யப்பட்டதற்கு பொங்கி எழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/b247b0cc41883325600851d98f2ef0b11706535569711224_original.jpg" alt="" width="720" height="540" /><br />இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் ஹீரோயினாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பெங்களூருவை சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா. இவர் &nbsp;காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p>
<p>சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் CSK vs RCB &nbsp;அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா செய்த ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. &nbsp;</p>
<p>"Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!" என நடிகை தன்யா ட்வீட் செய்து இருந்தார்.</p>
<p>(தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்… தருகிறோம் )&nbsp;</p>
<p>நடிகை தன்யாவின் இந்த ட்வீட்டால் HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. அதனால் கடுப்பான தன்யா "இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன். நான் நடிப்பதாக சொன்ன தமிழ் படங்களில் இருந்தும் வாபஸ் பெறுகிறேன். நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்" என கூறியிருந்தார்.&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/ba99bfeea01c2e15a200dc73f3bd41c11706535584986224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p>இப்படி தமிழர்களை கொச்சையாக பேசிய தான்யா பாலகிருஷ்ணா தான் இன்று ‘லால் சலாம்’ படத்தின் ஹீரோயின். தமிழகர்களை கொச்சைப்படுத்தி பேசி, தமிழ் சினிமாவில் இனி நடிகர் மாட்டேன் என சொன்ன ஒரு நடிகையை கொண்டு வந்து தன்னுடைய படத்தில் ஐஸ்வர்யா நடிக்க வைத்துள்ளார்.&nbsp;</p>
<p>நடிகர் ரஜினியை சங்கி என விமர்சனம் செய்ததற்கு பொங்கியெழுந்த ஐஸ்வர்யா ஏன் தன்யாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க வேண்டும். வேறு நடிகைகளே இல்லையா? இது தெரிந்தும் ரஜினிகாந்த் எப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் என நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில் என்ன?&nbsp; என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&nbsp;</p>

Source link