anna serial today 18th march zee tamil serial written update | Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை, பாக்கியம் எடுத்த அதிர்ச்சி முடிவு


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் கனி வயசுக்கு வந்திருக்கும் விஷயம் அறிந்து சண்முகம் வீட்டுக்கு கிளம்ப, சௌந்தரபாண்டி சண்முகத்துக்கு போன் போட்டு “உன் வீட்டில் எது நடந்தாலும் என் வீட்டில் இருந்து ஒரு ஆள் அங்க வந்து நிற்கணும்” என அவமானப்படுத்திப் பேசிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
சண்முகம் “உன் வீட்டில் இருந்து யாரும் வரத் தேவையில்லை, உங்க குடும்ப உதவி யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லி போனை வைக்கிறான். இதனைத் தொடர்ந்து பாக்கியம் மற்றும் இசக்கியென இருவரும் மிகவும் சந்தோஷமாக சண்முகம் வீட்டிற்கு வர, நில்லுங்க என்று தடுத்து நிறுத்துகிறான். 
உங்கக் குடும்பத்தில் இருந்து யாரும் இங்க வரத் தேவை இல்லை என்று சொல்ல, பாக்கியம் “நீ ஏதோ கோபத்தில் பேசுற, நான் கனிக்கு செய்ய வேண்டியது செஞ்சிட்டு போறேன்” என்று சொல்ல, சண்முகம் “யாரும் எதுவும் செய்யக்கூடாது” என சொல்கிறான். ஒரு கட்டத்தில் பாக்கியம் மனமுடைந்து “இனிமே அத்தனை நீ அழுது கூப்பிட்டால் கூட நான் இதை விட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்” என இசக்கியை அழைத்துக் கொண்டு செல்கிறாள். 
சண்முகம் இவர்களை வழியில் பார்த்து “அண்ணன் வீட்டுக்கு விசேஷத்துக்கு போனீங்களே, மரியாதை பலமா?” என்று நக்கலடித்து சண்முகத்தை வெறும் பையன் என்று சொல்லித் திட்ட, இசக்கி “எங்க அண்ணனை எதுக்கு வெறும் பையன்னு சொல்றீங்க? அது என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாம உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுடுச்சா?”வேணும் திருப்பி கேள்வி கேட்கிறாள். 
பாண்டியம்மா “ஆமா உங்க அண்ணன் வெறும் பையன் தான்” என்று சொல்ல, அவரது தலை முடியை பிடிக்கும் இசக்கி “இன்னொரு முறை அப்படி சொன்னா ஒவ்வொரு முடியா புடுங்கி எடுத்துடுவேன். யாரு வெறும் பையன்? ஓசி சாப்பாடு சாப்பிட வந்து, புருஷனை விட்டு வந்து உக்காந்துட்டு இருக்கியே நீ சொல்றியா அத?” என பாண்டியம்மாவை அவமானப்படுத்துகிறார்.
பிறகு பாக்கியம் “சண்முகத்தை ஏத்திவிட்டு அந்த வீட்டு வாசப்படிய மிதிக்காத மாதிரி பண்ணிட்டீங்களா? நம்ம பொண்ணும் அந்த வீட்ல தான் வாழ்ந்துகிட்டு இருக்கா.. அவளை நினைச்சு பார்த்தீங்களா?” என்று சொல்ல, சௌந்தரபாண்டி “அவ வாழாவெட்டியா இந்த வீட்டுக்கு வரட்டும், நான் பாத்துக்குறேன்” என்று சொல்கிறார். 
அடுத்ததாக பாண்டியம்மா “இவ்வளவு அசிங்கப்படுத்துறாங்க, இனியும் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று சொல்ல, “சொல்லாதீங்க, செய்யுங்க” என்று சிவபாலன் பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண

Source link