திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கடலில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசுகையில் ” முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை, திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம், திமுக, தமிழக மக்களுக்கு பாரமாக இருக்கிறது
புதுவையில் தமிழ் பேராசிரியருக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுதான் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் நிலை. நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். சிலர் என்னை பிகாரி என்று கூறுகின்றனர். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். பட்ஜெட் உரையை படித்தது தமிழா? என் தாய் தமிழ் அழுது விடுவாள்,
திமுக தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு. தி.க. திமுக தமிழ் விரோதி, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்கு சிலை வைத்ததால் இவர்களும் தமிழ் விரோதிகள் தான். மத்திய அரசின் வெற்றிக்கு காரணம், ஒவ்வொன்றிலும் மக்களின் பங்களிப்பு உள்ளது. இதனால் மக்கள் ஏற்று இருக்கிறார்கள், 10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 2024ல் பிரதமர் மோடிக்கு தாமரையில் வாக்களிக்கவில்லை என்றால் உங்களுக்கு உயர்வே இல்லை,
எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில் இருக்கிறது. சீமான் அதிபராகி பிரச்னைகளை தீர்த்து விடுவேன் என்று கூறி வருகிறார் காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான். 2024ல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு 30 இடங்களை கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App