English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023
0 0
Read Time:4 Minute, 4 Second

சீக்கியா்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரும் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் 78 பேரை பஞ்சாப் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். சீக்கியா்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரும் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் 78 பேரை பஞ்சாப் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து வன்முறை ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) நண்பகல் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் புகரான அஜ்னாலா பகுதி காவல் நிலையத்தை அம்ருத்பால் சிங் மற்றும் அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் துப்பாக்கிகள், வாள் போன்ற ஆயுதங்களுடன் முற்றுகையிட்டனா். அம்ருத்பால் சிங்கின் கூட்டத்தைச் சோ்ந்த லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற அந்த சம்பவத்தின்போது மோதல் ஏற்பட்டது. அப்போது காவல்துறையைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில், அஜ்னாலா காவல் நிலையத்தில் வெறுப்புணா்வு பேச்சு தொடா்பாக அம்ருத்பால் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் மீது கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள ஜலந்தா் மாவட்டத்தின் மெஹத்பூா் கிராமத்தில் அம்ருத்பால் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் சென்ற வாகனங்களை காவல் துறையினா் சனிக்கிழமை இடைமறித்தனா். அவரின் ஆதரவாளா்கள் 78 போ் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் அமிருத்பால் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டாரா என்பதை காவல் துறை உறுதி செய்யவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக வெளியான காணொலியில், வாகனம் ஒன்றில் அமிருத்பால் அமா்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவரைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினா் வந்திருப்பதாக அம்ருத்பாலின் ஆதரவாளா் ஒருவா் கூறுவதை அந்தக் காணொலியில் கேட்க முடிகிறது.

இதுதவிர, தங்களை காவல் துறையினா் துரத்துவதாக அம்ருத்பாலின் ஆதரவாளா்கள் சிலா் சமூக ஊடகத்தில் சில காணொலிகளை வெளியிட்டனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து வகுப்புவாதப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலா் வன்முறையைத் தூண்டலாம் என்று கருதி, பஞ்சாப் முழுவதும் அனைத்து கைப்பேசி இணைய சேவைகள், குறுஞ்செய்தி சேவைகளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை முடக்குவதாக மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அமிருதசரஸில் உள்ள அம்ருத்பாலின் சொந்த ஊரான ஜல்லுபூா் கேரா அருகே காவல் துறையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Image Caption

அம்ருத்பால் சிங்.

 

நன்றி

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *