நியூயார்க்: அமெரிக்காவில் திருடப்பட்ட பீர் சரக்கை வாங்கி விற்ற விவகாரத்தில் இரண்டு இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் இரண்டு உள்ளூர் வணிக நிறுவனங்களில் சுமார் 20,000 டாலர் மதிப்புள்ள திருட்டு பீர் சரக்கை வாங்கி விற்ற புகாரின் அடிப்படையில், இரண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில்:
குறிப்பிட்ட இரண்டு வணிக நிறுவனங்கள், திருட்டு பீர் சரக்கை வாங்கி விற்று வந்தன. இதுபோன்ற பீர் சரக்கை அந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி விற்கும் வேலையில் அமெரிக்கவாழ் இந்தியர்களான கேதன்குமார், பியூஷ்குமார் படேல் உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டு வந்தனர். திருடப்பட்ட பீரின் மதிப்பு 20,000 டாலர் (ரூ.16.5 லட்சம்). இவர்கள் மூவரும் அடுத்த மாதம் பூர்வாங்க நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வார்கள் என்றனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App