அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறுவோருக்கு புதிய வெயிட்டேஜுக்காண அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அப்போது, 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள் விருப்ப ஓய்வு பெற்றால் 5 ஆண்டுகள் கூடுதலாக பணியாற்றியதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 54 க்கு பதிலாக 55 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால், 5 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதேபோல், 56 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 4 ஆண்டுகளும், 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 58 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 2 ஆண்டுகளும் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
59வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு, ஓய்வூதியம் கணக்கிடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.