ஆட்டோ ஓட்டுநராகச் சுற்றும் ராதா கிருஷ்ணனுக்கு பண்ணைப்புரத்திலுள்ள எல்லோரும் பழக்கம். சொந்த வீடு, மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்தாலும் பிள்ளைகளை கான்வென்ட்டில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். தெரியாத தொழில் மூலம் அவருக்குச் சிக்கல் ஏற்பட, குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூருக்கு ஓடிப்போகிறார். கேரளா, காசி எனப் பயணப்படும் கதையில், ஓடிப்போன ராதா கிருஷ்ணனின் நோக்கம் என்ன, அவன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தானா என்பதற்கான விடைகளைச் சொல்கிறது ‘மாமனிதன்’.
ஆட்டோ ஓட்டும் ராதா கிருஷ்ணனாக விஜய் சேதுபதி. வழக்கமாக அவர் படங்களில் வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் விஜய் சேதுபதியாகவே படத்தில் உலாவுகிறார் என்பதே. அதை இந்தப் படத்தில் மாற்ற முயற்சி செய்திருக்கிறார். பல காட்சிகளில் ஆட்டோ டிரைவர் ராதா கிருஷ்ணன் மட்டுமே நமக்குத் தெரிகிறார். நாயகியாக காயத்ரி ஷங்கர் பல்வேறு காலகட்டங்களுக்கான நடிப்பை அதற்கேற்ற முதிர்ச்சியுடன் வழங்கியிருக்கிறார். குடும்ப நண்பராக வரும் குரு சோமசுந்தரத்துக்கு ஆழமானதொரு கதாபாத்திரம். திறம்பட நடித்துக் கதை நகர வழிவகுத்திருக்கிறார். துணை நடிகர்களாக வரும் ஜுவல் மேரி, அனிகா, சரவண சக்தி ஆகியோருக்கும் கதையில் முக்கியமான வேடங்கள். ஒரு காட்சியில் வந்தாலும் மறைந்த நடிகை கே.பி.ஏ.சி.இலலிதா நெகிழச் செய்கிறார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App