அடுத்த படம் இயக்குவதற்கு இத்தனை ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொள்வது எதற்காக?
“தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு பாணி உண்டு. என்னுடைய படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின் மட்டுமே பெரிய ஆளாக இருப்பார்கள். மற்றபடி காமெடி நடிகர்கள், துணை நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் எவரும் பிரபலமானவர்களாக இருக்க மாட்டார்கள். நான் அப்படி வைத்துக்கொள்ள மாட்டேன். நான் தயாரிப்பாளர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்று நினைப்பவன்.
தற்போது வளர்ந்துவரும் இயக்குநர்கள் முதல் படத்தைச் சின்ன பட்ஜெட்டில் எடுத்து வெற்றி கண்டவுடன், அடுத்த படத்தில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின், பிரபலமான மற்ற நடிகர்கள், பெரிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் எனத் தயாரிப்பாளர்களைச் செலவழிக்க வைத்து தங்களைப் பெரிய இயக்குநர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். நான் இதுவரை என்னுடைய படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களைக் கூட நடிக்க வைத்ததில்லை. நிறையத் திறமையானவர்கள் வாய்ப்புகள் தேடி அலைகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறேன்.

ஆனால் என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன். சினிமாவில் வெற்றி பெறுவது என்பது வேறு, வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு. நான் வெற்றிபெற்றேன். ஆனால் அதனைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சமம் எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு வருகிறேன். இதுதான் என்னுடைய இடைவெளிக்கான காரணம்.”
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App