மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனாவில் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி இருக்கிறார். தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக வந்தவண்ணம் இருக்கின்றனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் இப்பிரச்னை குறித்து மக்களிடம் உரையாற்றினார். அதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “சிவசேனாவுடன் சமசரமாக செல்லவேண்டுமானால் உடனே இயற்கைக்கு பொருத்தமற்ற கூட்டணியை கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவசேனா அதிகமான இழப்பை சந்தித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் பயனடைந்துள்ளன. இந்த கட்சிகள்(காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எங்கு பலமாக இருக்கிறதோ அங்கு சிவசேனா பலவீனமாக இருக்கிறது. எனவே சிவசேனாவையும், தொண்டர்களையும் காப்பாற்றவேண்டுமானால் உடனே இயற்கைக்கு மாறான கூட்டணியை உடனே கைவிடவேண்டும்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App