சாப்பாட்டில் உப்பு கூடியதால் கோபப்பட்ட 80 வயது மனிதர் தனது மருமகளைச் சுட்டு கொன்ற நிகழ்வு லக்னோவில் நிகழ்ந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை அவர் தான் குற்றவாளி என உறுதி செய்து நேற்று கைது செய்திருக்கிறார்கள். என்ன நடந்தது?!
கபூர், 80 வயது மனிதர், அவரின் மகன் இர்ஷாத், மகள் தஷ்மினா. மருமகள் சுலேமா ஆகியோர் சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்துள்ளனர். கபூர், சுலேமாவைக் கோபமாகத் திட்டிவிட்டு துப்பாக்கி எடுத்து சுட்டிருக்கிறார். அவர் கோபப்பப்பட்டதற்கு காரணம் சுலேமா தயாரித்த இரவு உணவில் உப்பு அதிகமாக இருந்ததாம். சுலேமா இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது போலீஸ் அங்கு வந்திருக்கின்றனர். போலீஸுக்கு பெரியவரின் மகன் இர்ஷாத் தகவல் கொடுத்துள்ளார்.
கபூர் ஆரம்பத்தில், திருடர்கள் நுழைய முயற்சித்தனர். அவர்களைச் சுடப் போய் குண்டு தவறி மருமகளைத் தாக்கிவிட்டது எனச் சொல்லி தப்பிக்க முயன்றிருக்கிறார். அதுவும் போலீஸ் கேள்வி கேட்கத் தொடங்குவதற்கு முன்பே அவர் ஒப்புக் கொண்டது சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது.

எந்த வழியில் நுழைந்தனர் எனக் கேட்ட போது பின்வாசலைக் காட்டியுள்ளார். ஆனால் பின்வாசல் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவரது மகன், மகள் கூறிய ஸ்டேட்மென்டில் இருந்து பெரியவர் கூறியது முற்றிலும் மாறுபட்டு இருந்தது.இதனால் குற்றம் உறுதியாகி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருமகளை நோக்கி இவர் கத்துவதை அண்டை வீட்டார் பார்த்துள்ளனர். சொந்த மருமகளையே சுட்டுக் கொன்ற இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App