சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13 வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14 வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை, குரோம் பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அமல்படுத்தபடாமல் உள்ள காரணத்தால் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App