சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 6 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தாத காரணத்தால் ரூ.3267 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை தொடங்கியுள்ளது
இனி ஆண்டு தோறும் சொத்து வரி உயர்வு உயர்த்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் சொத்துவரி உயர்த்தாத காரணத்தால் ரூ.3276 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி 2013 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்த்தாத காரணத்தால் ரூ.2598 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2019 – 20ம் ஆண்டுகளிலும் சொத்துவரி உயர்த்தாத காரணத்தால் கூடுதலாக ரூ.678 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 6 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தாத காரணத்தால் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3276 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App