Read Time:1 Minute, 10 Second
கோவை: கேரளாவின் சில பகுதிகளில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலி யாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு நிற திட்டுகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், தமிழக – கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனைச் சாவடியில் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் வருகின்றனரா என கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App