கோவை: புதிய கல்விக்கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ரோட்டரி உத்சவ்-2022’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "தாய்மொழியை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதற்கு இங்கு சில பேருக்கு சிரமம் இருக்கிறது. இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றால், கற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். தாய்மொழியை கற்காமல் இருப்பது தான் தவறு. தாய்மொழியை கற்றுக்கொண்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு தாய் மொழியும் சரியாக தெரிவதில்லை. இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று இருக்கின்றனர். பிறகு எப்படி தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியும். ஆங்கிலம் கலக்காத தமிழில் நாம் பேசிப் பழகுவது நல்லது” என்றார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App