சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "மக்களுக்குப் பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள்" என்பது போல் பேசியிருந்தார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
ஓபிஎஸ் கருத்துக்கு பதில் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைக்கு முதல்வர், எத்தனைக் கோடிப் பேர் பயன்பெற்றார்கள் என்று சட்டமன்றத்தில் வாசித்த சாதனைப்பட்டியல் அதிமுகவை வழிநடத்தும் இரட்டைத் தலைமைக்கு எரிச்சலைத் தருகிறது. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் கொடுமை, அரை நிர்வாணமாகப் போராடியது, அவர்களுக்குரிய கடன் தள்ளுபடியை நிறுத்தி வைத்தது, கொடுமையான சட்டங்களின்கீழ் உழவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளியது ஆகியவற்றுக்கும் மேலாக உழவர்கள் தற்கொலை தொடர்கதையாக இருந்ததும் அதிமுக ஆட்சியில்தான்
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App