சென்னை: பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறை, மின் பயன்பாடு அதிகரிப்பு, நிலக்கரியை எடுத்து வரும் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இதுகுறித்து நான் எனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியதோடு, தமிழக சட்டப்பேரவையிலும் இந்தப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அமைச்சரும் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தார். இருப்பினும், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது மின் வெட்டு ஏற்படுவது என்பது வாடிக்கையாக இருக்கிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App